For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழர்களே கடல் நீரைத் தர்றேன் குடிங்க, காவிரிதான் வேணும்னா கத்திட்டே இருங்க.. சு.சாமி

காவேரி தண்ணீர் தான் வேண்டும் என்றால் விழுந்து புரண்டு கண்ணீர் விடுங்கள் என்று தமிழக மக்களை கிண்டல் செய்து பாஜக கட்சியை சேர்ந்த சுப்பிரமணியன் சாமி ஏளனமாக டிவிட் செய்துள்ளார்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

சென்னை: காவேரி தண்ணீர் தான் வேண்டும் என்றால் விழுந்து புரண்டு கண்ணீர் விடுங்கள் என்று தமிழக மக்களை கிண்டல் செய்து பாஜக கட்சியை சேர்ந்த சுப்பிரமணியன் சாமி ஏளனமாக டிவிட் செய்துள்ளார்.

தற்போது காவிரி மேலாண்மை வாரிய பிரச்சனை உச்சத்தை அடைந்து இருக்கிறது. திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் காவிரி மேலாண்மை வாரியம் கேட்டு குரல் கொடுத்து களத்தில் இறங்கி உள்ளனர்.

If you want Cauvery water then howl&cry says BJPs Subramanian Swamy in twitter

ஆனால் மத்திய பாஜக அரசு கர்நாடக தேர்தலை கருத்தில் கொண்டு இன்னும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் இருக்கிறது. இந்த நிலையில் காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீரே கிடைக்காது என்பது போல பாஜக கட்சியை சேர்ந்த சுப்பிரமணியன் சாமி டிவிட் செய்துள்ளார்.

எப்போதும் தமிழக மக்களின் கருத்துக்கு எதிராக பேசிவரும் இவர் தற்போது ''தமிழக மக்களுக்கு குடிக்கவும் பயன்படுத்தவும் தண்ணீர் வேண்டும் என்றால் கடல் நீரை தூய்மை செய்து பயன்படுத்த நானே ஏற்பாடு செய்கிறேன். அதைவிட்டுவிட்டு உங்களுக்கு காவிரி தான் வேண்டும் என்றால் விழுந்து புரண்டு கண்ணீர் விடுங்கள். '' என்று கிண்டல் செய்துள்ளார்.

இதன் மூலம் அவர் மறைமுகமாக காவிரி நீர் கிடைக்காது, தமிழக மக்கள் கண்ணீர்விடத்தான் வேண்டும் என்று கூறி இருப்பதாக டிவிட்டரில் மக்கள் கொந்தளித்து இருக்கிறார்கள்.

English summary
If you want Cauvery water then howl&cry says BJP's Subramanian Swamy in twitter. He says that ''If Tamil people want adequate drinking and field water I can arrange through sea water desalination plants. If Cauvery water then howl&cry '' in twitter.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X