நீ மாட்டுக்கறி விழாவில் கலந்துகிட்டியா? சாப்பிட்டுக் கொண்டிருந்த சூரஜ் மீது வெறித்தாக்கல்
ஐஐடி வளாகத்தில் உள்ள கேண்டினில் சாப்பிட்டுக் கொண்டிருந்த மாணவர் சூரஜ் மீது இந்துத்துவ மாணவர் அமைப்பினர் வெறித்தாக்குதல் நடத்தியுள்ளனர்.
சென்னை: ஐஐடி மாணவர்கள் மாட்டுக்கறி விழாவில் கலந்து கொண்டதற்காக இந்துத்துவ அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள் வெறித்தனமாக தாக்குதல் நடத்தியுள்ளனர்.
மாட்டிறைச்சி தடைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சென்னை ஐஐடி வளாகத்தில் மாணவர்கள் மாட்டுகறி திருவிழா நடத்தினார்கள்.
இறைச்சிக்காக பசு, காளை, கன்று, ஒட்டகம் விற்கக் கூடாது என்று மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது. அதற்கு நாடு முழுவதும் பல்வேறு கண்டனக் குரல்கள் எழுந்து வருகின்றன.

மாட்டுக் கறி விழா
இந்நிலையில், மாட்டிறைச்சிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளதற்கு ஏதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக சென்னை ஐஐடி வளாகத்தில் மாட்டுகறி திருவிழா நடைப்பெற்றது. இந்த விழாவில் 80க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

6 பேர் கொண்ட கும்பல்
இதனைத் தொடர்ந்து, மாட்டுக்கறி விழாவில் கலந்து கொண்ட சூரஜ் என்ற மாணவர் இந்துத்துவ மாணவர் அமைப்பால் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அவரது நண்பர் அபினவ் கூறியதாவது: மதியம் 1.30 மணியளவில் சூரஜ் மற்றும் அவரது நண்பரும் ஐஐடி வளாகத்தில் இருக்கும் மெஸ்சில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது வலதுசாரி மாணவர்கள் அமைப்பைச் சேர்ந்த 6 பேர் அவர்களிடம் சென்றனர்.

பெயரைக் கேட்டு தாக்கிய கும்பல்
அவர்கள் இருவரையும் சூழ்ந்து கொண்ட அந்த கும்பல் மாட்டிறைச்சி பண்டிகையில் கலந்து கொண்டவர்களா நீங்கள் என்று கேட்டுள்ளது. ஆமாம் என்ற சூரஜ் சொன்னதும் அந்த கும்பல் பயங்கரமாக அடித்து தாக்கியுள்ளது.

ஐஐடி டீனிடம் புகார்
இதுகுறித்து ஐஐடி டீன் மற்றும் போலீஸ்சிடம் புகார் தெரிவித்துள்ளோம். நாங்கள் அனுமதி பெற்றே இந்த விழாவை நடத்தினோம். மாட்டிறைச்சி விழா நடத்திய பின்னர், வலதுசாரி அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள் தேச விரோத செயல்களில் ஈடுபடுகின்றீர்கள். உங்களை சும்மா விடமாட்டோம் என்று மிரட்டி வந்தார்கள். இன்று நேரடியாக அடித்துவிட்டனர் என்று அபினவ் கூறினார்.












Click it and Unblock the Notifications