கொடநாடு பங்களா எஸ்டேட் கம்ப்யூட்டர் ஆபரேட்டர் திடீர் தற்கொலைக்கு காரணம் என்ன?: வீடியோ
ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட் பங்களாவின் கம்ப்யூட்டர் ஆபரேட்டராகப் பணிபுரிந்த தினேஷ் தற்கொலை செய்துகொண்டார். தினேஷ் தற்கொலைக்கான காரணத்தை கண்டுபிடிக்க வேண்டும் என கொடநாடு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர
கோத்தகிரி: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் எஸ்டேட் பங்களாவில் கம்ப்யூட்டர் ஆபரேட்டராக வேலை பார்த்து வந்த தினேஷ் என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மறைந்த முதல்வருக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட் பங்களாவில் கடந்த ஏப்ரல் 24ஆம் தேதி கருப்பு நிறக் காரில் வந்த ஒரு கும்பல், அங்கிருந்த காவலாளி ஓம்பகதூர் என்பவரை கொலை செய்தது. மற்றொரு காவலாளி கிருஷ்ண பகதூர் பலத்த காயமடைந்தார்.

இந்நிலையில் இந்த கொலையில் தொடர்புடைய ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் கனகராஜ் என்பவர் சாலை விபத்தில் மரணம் அடைந்தார். ஆனால் அது கொலை என அவரது அண்ணன் பகிரங்கமாக ஊடகங்களிடம் சொன்னபோதும் அதுகுறித்து காவல்துறை கண்டுகொள்ளவில்லை.
இந்நிலையில், கொடநாடு எஸ்டேட்டில் கம்ப்யூட்டர் ஆபரேட்டராக பணிபுரிந்த தினேஷ் தூக்கிட்டு தற்கொலைச் செய்துகொண்டுள்ளார். அவருக்கு கண்ணில் பிரச்சனை, அதற்காக மருத்துவம் பார்த்துக்கொண்டிருந்தார். அதனால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது. இதுகுறித்து, கோத்தகிரி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆனால் ஜெயலலிதாவின் மரணத்துக்குப் பிறகு தொடர்ந்து அங்கு கொலை, கொள்ளை, தற்கொலை நடக்கிறதென்றால் அங்கு ஏதோ மர்மம் இருக்க வேண்டும். அந்த மர்மத்தை போலீசார் தான் கண்டுபிடிக்க வேண்டும் என கொடநாடு மக்கள் கூறுகின்றனர்.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications