ஆளுக்கு 2 பிளேடு தருவோம்.. நீங்களே ஷேவ் பண்ணிக்கனும்..கைதிகளுக்கு புது உத்தரவு!
சென்னை: தமிழக சிறைகளில் இனிமேல் கைதிகள் தாங்களே ஷேவ் செய்து கொள்ள வேண்டுமாம்.
இந்தத் திட்டத்தின் மூலம் கைதிகள் சுத்தமாக இருப்பதோடு, பல்வேறு வியாதிகள் பரவுவதையும் தடுக்கலாம் என்று சிறைத்துறை கருதுகிறது.
மேலும் சிறைக் கைதிகளுக்கு மனநல ஆலோசனை வழங்க 9 மத்திய சிறைகளுக்கும் தலா 2 கவுன்சலர்களை நியமிக்கவும் சிறைத்துறை திட்டமிட்டுள்ளது.

ஆளுக்கு 2 பிளேடு
கைதிகளுக்கு மாதத்திற்கு 2 டிஸ்போசபிள் பிளேடு தரப்படுமாம். இதை வைத்துக் கொண்டு மாதம் முழுவதும் அவர்கள் ஷேவ் செய்து சுத்தமாக இருக்க வேண்டுமாம்.

திரிபாதி சொல்வது என்ன
இதுகுறித்து சிறைத்துறை கூடுதல் டிஜிபி ஜே.கே.திரிபாதி கூறுகையில், தற்போது சவரத் தொழிலாளர்கள் மூலம் பழைய கத்தியை வைத்து பழைய முறையில் சவரம் செய்யும் முறை இருந்து வருகிறது. இது பல பிரச்சினைகளுக்கு காரணமாகி விடுகிறது. மேலும் கைதிகளும் சரிவர முடி வெட்டிக் கொள்ள, ஷேவ் செய்ய சங்கடப்படுகிறார்கள்.

அவர்களே
எனவேதான் டிஸ்போசபிள் பிளேடு தர முடிவு செய்துள்ளோம். எனவே இனிமேல் கைதிகள் அவர்களே ஷேவ் செய்து கொள்ளலாம். மாதம் 2 பிளேடு தரப்படும்.

பிளேடு வாங்க டெண்டர்
பிளேடு வாங்க விரைவில் டெண்டர் விடப்படும்.

அத வச்சு அறுத்துட்டா...
கைதிகளுக்கு தரப்படும் பிளேடை அவர்கள் தவறாகப் பயன்படுத்தி, ஆயுதம் போல பாவித்து விபரீத செயலில் ஈடுபடாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படும். மேலும் பிளேடுகளின் எண்ணிக்கையும் தினசரி கணக்கெடுக்கப்படும் என்றார் அவர்.

பிளேடு திட்டத்துக்கு ரூ. 43 லட்சம்
பிளேடு திட்டத்துக்கு ரூ. 43 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாம். மேலும் ஒரு கைதிக்கு வருடத்திற்கு இதன் மூலம் ரூ. 336 செலவாகுமாம். தமிழகத்தில் மொத்தம் 13,000 கைதிகள் உள்ளனராம்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications