தமிழக அரசுக்கும் வருமான வரித்துறை ரெய்டுக்கும் தொடர்பில்லை.. கடம்பூர் ராஜூ விளக்கம்
சசிகலா குடும்பத்தில் நடத்தப்படும் வருமான வரித்துறை ரெய்டுக்கும் தமிழக அரசுக்கும் தொடர்பில்லை என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
Subscribe to Oneindia Tamil
மதுரை: சசிகலா குடும்பத்தில் நடத்தப்படும் வருமான வரித்துறை ரெய்டுக்கும் தமிழக அரசுக்கும் தொடர்பில்லை என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
சசிகலா குடும்பத்தினரை சுற்றி வளைத்துள்ள வருமான வரித்துறை. நேற்று முதல் சசிகலாவின் உறவினர்கள் மற்றும் அவர்களுக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் வருமான வரித்துறையினர் அலசி ஆராய்ந்து வருகின்றனர்.

கறுப்புப்பணம் ஒழிப்பு நடவடிக்கையாக வருமான வரித்துறையினர் இந்த சோதனையை மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில் சசிகலா குடும்பத்தில் நடத்தப்படும் ஆய்வு குறித்து அமைச்சர் கடம்பூர் ராஜூ கருத்து தெரிவித்துள்ளார்.
அதாவது யாரையும் பழிவாங்குவதற்காக வருமான வரித்துறை சோதனை நடத்தப்படவில்லை என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். தமிழக அரசுக்கும் வருமான வரித்துறைக்கும் தொடர்பில்லை என்றும் அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications