தென்மேற்கு பருவமழை தீவிரம் - அணைகளில் நீர்மட்டம் உயர்வு
நெல்லை: மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சாரல் மழை தொடர்ந்து பெய்து வருவதால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் விவசாய தொழிலே பிரதானமாக நடந்து வருகிறது. இந்த இரு மாவட்டங்களில் உள்ள விளை நிலங்கள் பாபநாசம் அணையில் இருந்து வரும் தண்ணீர் மூலம் 86107 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

இதில் நெல்லை மாவட்டத்தில் மட்டும் 40 ஆயிரம் ஏக்கரும், தூத்துக்குடி மாவட்டத்தில் 46107 ஏக்கரும் அடங்கும். தென் மேற்கு பருவமழையின் மூலம் கார் பருவ சாகுபடியும், வடகிழக்கு பருவமழையின் மூலம் பிசான பருவ சாகுபடியும் நடக்கும்.
கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை ஏமாற்றம் அளித்ததால் பிசான நெல் சாகுபடி சரியாக நடக்கவில்லை. இதனால் தென் மேற்கு பருவமழை குறித்த காலத்தில் தொடங்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்ப்பில் இருந்தனர். ஆனால் ஜூன் 1ம் தேதி தொடங்கியிருக்க வேண்டிய தென்மேற்கு பருவமழை ஏமாற்றம் அளித்தது.
இந்த நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்ப குதியில் தொடர்ந்து சாரல் பெய்து வருகிறது. இதனால் பாபநாசம், சேர்வலாறு அணைகளின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது.
143 அடி கொண்ட பாபநாசம் அணையில் 51.20 அடியாக இருந்த நீர்மட்டம் தற்போது 2 உயர்ந்து 53.75 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1765 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து வினாடிக்கு 204 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இங்கு அணைப்பகுதியில் 6 மிமீ மழை பதிவாகியுள்ளது.
156 அடி கொண்ட சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 65.62 அடியாக இருந்தது. தற்போது அது 7 அடி உயர்ந்து 72.83 அடியாக உள்ளது. 118 அடி கொண்ட மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 64.39 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 2 கன அடி தண்ணீர் மட்டுமே வருகிறது. அடவி நயினார் அணையின் நீர்மட்டம் 53.50 அடியாக உள்ளது.
கடனாநதியின் அணை பகுதியில் 4.5, குண்டாறு 21, அடவி நயினார் அணை 25 மிமீ மழை பதிவாகியுள்ளது. தொடர்ந்து நீர்வரத்து இருந்து அணைகளில் நிரம்பினால் மட்டுமே கார் பருவ நெல் சாகுபடியை தொடங்க முடியும் என்ற நிலையில் விவசாயிகள் இருக்கின்றனர்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications