வாக்காளர்களுக்கு பூத் ஸ்லிப் கொடுக்கும் பணி.. இன்றோடு நிறைவு
சென்னை: லோக்சபா தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையமே பூத் ஸ்லிப்புகளை வழங்குகிறது. இந்த்ப பணி இன்றோடு முடிகிறது.
24ம் தேதி தமிழகத்தில் லோக்சபா தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக வாக்காளர்களுக்கு அவர்களது புகைப்படத்துடன் கூடிய பூத் ஸ்லிப்புகளை தேர்தல் ஆணையமே வழங்குகிறது.
ஏப்ரல் 11ம் தேதி இப்பணி தொடங்கியது. சில ஊர்களில் அன்று தொடங்கவில்லை. தாமதமாக தொடங்கியது. இன்று மாலைக்குள் இப்பணியை முடிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது.

சென்னையில் விறுவிறு விநியோகம்
சென்னையில் பூத் ஸ்லிப்புகளை வழங்கும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

சின்னப் பசங்க கொண்டு வந்து கொடுக்கிறாங்க
தென் சென்னையில் ஒரு பகுதியில் சிறார்கள் பூத் ஸ்லிப்புகளைக் கொண்டு வந்து கொடுத்ததைக் காண முடிந்தது.

வேறு அடையாள அட்டை தேவையில்லை
தேர்தல் ஆணையம் தரும் பூத் ஸ்லிப்புகளிலேயே வாக்காளர்களின் புகைப்படம் இருப்பதால் வேறு எந்த புகைப்பட அடையாள ஆதாரத்தையும் வாக்களிக்கும்போது கொண்டு வரத் தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கட்சிகள் தனியாக கொடுக்கும்
அரசியல் கட்சிகளும் இதே போன்ற புகைப்படங்களுடன் கூடிய பூத் ஸ்லிப்புகளை தனியாக வழங்குவார்கள்.












Click it and Unblock the Notifications