கதவு திறந்தே இருக்கும்.. வந்தா வாங்க, வராங்காட்டி போங்க.. இது ஜெயக்குமார்!
ஈபிஎஸ் அணியுடன் ஓபிஎஸ் அணி இ,ணை வந்தால் நல்லது, வராவிட்டாலும் பரவாயில்லை என அமைச்சச்சல் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
சென்னை: ஈபிஎஸ் அணியுடன் ஓபிஎஸ் அணி இ,ணை வந்தால் நல்லது, வராவிட்டாலும் பரவாயில்லை என அமைச்சச்சல் ஜெயக்குமார் கூறியுள்ளார். பேச்சுவார்த்தைக்காக கதவு திறந்தே இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
பிரிந்து கிடக்கும் அதிமுகவின் இரு கோஷ்டிகளும் இணைவது தொடர்பாக 7 பேர் கொண்ட குழுவை அறிவித்து புயல் வேகத்தில் வேலை பார்த்து வந்தது. இந்நிலையில் ஈபிஎஸ் அணியினர் முறையாக அழைப்பு விடுக்கவில்லை என ஓபிஎஸ் அணி குற்றம் சாட்டியது.
சேலத்தில் ஓபிஎஸ் அணியின் ஆதரவு எம்எல்ஏ செம்மலை நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் ஈபிஎஸ் அணியுடன் சேர ஆதரவார்கள் எதிர்ப்பு தெரிவித்தாக கூறப்பட்டது. இதைத்தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெறுவதில் தடை ஏற்பட்டுவந்தது.

நிபந்தனைகளை ஏற்றால் மட்டுமே..
ஆனால் அவ்வப்போது ஈபிஎஸ் அணியினர் மட்டும் ஓபிஎஸ் அணியினர் எப்போது வேண்டுமானாலும் பேச வரலாம் என தாராளம் காட்டினர். 2 நிபந்தனைகளை ஏற்றால் மட்டுமே பேச்சுவார்த்தை என திட்டவட்டமாக ஓபிஎஸ் கோஷ்டி.

கதவு திறந்தே இருக்கும்..
இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், ஈபிஎஸ் அணியுடன் ஓபிஎஸ் அணி இணைய வந்தால் நல்லது என கூறியுள்ளார். பேச்சுவார்த்தைக்காக கதவு திறந்தே இருக்கும் என்றும் அவர் கூறினார்.

வராவிட்டாலும் பரவாயில்லை..
அதேநேரத்தில் பேச்சுவார்த்தைக்கு வராவிட்டாலும் பரவாயில்லை என்றும் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.இரட்டை இலைச் சின்னத்தை பெறவே ஈபிஎஸ் கோஷ்டி ஓபிஸ் தரப்புடன் இணைய ஆர்வம் காட்டி வருகிறது. இந்நிலையில் அமைச்சர் ஜெயக்குமார் வந்தா வாங்க வராட்டி போங்க என கூறியுள்ளார்.

ஏற்னவே ஏழரையை கூட்டிய அமைச்சர்
ஏற்கனவே ஓபிஎஸை அமெரிக்க அதிபர் ட்ரம்போடு ஒப்பிட்டு நக்கலடித்ததார் ஜெயக்குமார். அதற்கு ஓபிஎஸ் அணியின் முன்னாள் அமைச்சர் கேபி.முனுசாமி கடும் கண்டனம் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications