தேர்தல் ஆணையத்தின் மீது வழக்கு - இந்திய யூனியன் முஸ்லீம் லீக் அறிவிப்பு
சென்னை: தேர்தல் ஆணையத்தின் மீது வழக்கு தொடர உள்ளதாக இந்திய யூனியன் முஸ்லீம் லீக் அறிவித்துள்ளது.
இது குறித்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொதுச் செயலாளர் பாத்திமா முஸாபர் செய்தியாளர்களிடம் கூறுகையில், கேரள மாநில முஸ்லிம் லீக் கமிட்டி எம்.பியும், மத்திய இணை அமைச்சருமான இ.அஹமது மற்றும் இந்திய தேர்தல் ஆணையத்தின் 03.03.2012 தேதியிட்ட தவறான தீர்ப்பை எதிர்த்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் சார்பில் டெல்லி உயர் நீதி மன்றத்தில் 21.03.2012 அன்று வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
இந்த வழக்கை, நீதிபதி விபின் சாங்கி (வழக்கு எண்.டபிள்யூ.பி.(சி) 1624/2012 மற்றும் சி.எம்.என்ஓஎஸ்.355_51/2012) ஏற்றுக் கொண்டு, இ.அஹமது மற்றும் தேர்தல் ஆணையத்திற்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டுள்ளார்.
ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகித்து, மத்திய அரசில் தொடர்ந்து இரண்டாவது முறையாக இணை அமைச்சராக இருந்து வரும் இ.அஹமத் மற்றும் அவரின் அரசியல் செயல்பாடுகளுக்குத் துணையாக இயங்கி வரும் கே.எம்.காதர் மொய்தீன், தி.மு.க.வின் முன்னாள் எம்.பி. ஆகிய இருவரும் ஒருங்கிணைந்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பெயரில் மிகப்பெரும் முறைகேட்டைச் செய்துள்ளார்.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, உம்மன்சாண்டி தலைமயிலான கேரள மாநில அரசு, இந்தியத் தேர்தல் ஆணையம் ஆகியவை இந்த முறைகேட்டுக்கு உடந்தையாக இருந்துள்ளன. இதற்கு தேவையான ஆதரங்களை சேகரித்து வைத்துள்ளோம்.
எனவே, இந்த மோசடி செயலில் ஈடுபட்டுள்ள மத்தியில் ஆளும் ஐக்கி முற்போக்கு கூட்டணி அரசாங்கம் களைக்கப்பட வேண்டும்.
இந்த கோரிக்கையை முன்வைத்து, இந்திய ஜனாதிபதியை சந்தித்து மனு அளிக்க உள்ளோம். மேலும் இ.அகமது, கே.எம்.காதர் மொய்தீன் மற்றும் அவர்களது கூட்டத்தாருக்கு உடந்தையாக இருந்து செயல்பட்ட மத்திய தேர்தல் ஆணையத்தின் மீதும் வழக்கு தொடர உள்ளோம் என்றார்.












Click it and Unblock the Notifications