நவம்பர் வரை காத்திருக்கச் சொன்ன முதல்வர்...போராட்டத்தில் உறுதியாக இருக்கும் ஜாக்டோ ஜியோ!
ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் முதல்வருடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளது.
ஈரோடு: ஜாக்டோ-ஜியோ அமைப்பினரிடம் முதல்வர் நடத்திய பேச்சுவதார்த்தையில் நவம்பர் இறுதி வரை காத்திருக்க கூறியுள்ளதையடுத்து, போராட்டத்தைத் தொடங்வது குறித்து அவர்கள் ஆலோசித்து வருகின்றனர்.
அரசு ஊழியர்களுக்கு 7-வது ஊதியக்குழு பரிந்துரையை உடனடியாக அமலாக்க வேண்டும். அதற்கு முன்பு 20 சதவீதம் இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் என்பது அரசு ஊழியர்களின் கோரிக்கை.
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அனைவருக்கும் அமலாக்க வேண்டும் என்பதும் ஜாக்டோ ஜியோ அமைப்பின் கோரிக்கை. இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி பல கட்ட போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. செப்டம்பர் 7 முதல் காலவறையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாகவும் அரசு ஊழியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பினர் அறிவித்தனர்.

பேச்சுவார்த்தை தோல்வி
கடந்த 4ம் தேதி தலைமைச் செயலகத்தில் இது தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்றது. தமிழக அரசு சார்பில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார், வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆகியோரும், ஜாக்டோ ஜியோ சார்பில் அதன் தலைமைக்குழு உறுப்பினர்களும் பங்கேற்றனர். ஆனால் முதற்கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது.
முதல்வருடன் சந்திப்பு
இதனைத் தொடர்ந்து திட்டமிட்டபடி நாளை முதல் வேலை நிறுத்தம் தொடரும் என்று ஜாக்டோ ஜியோ அமைப்பினர் அறிவித்தனர். சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை போராட்டம் அறிவித்திருந்த நிலையில் ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் ஈரோட்டில் இன்று முதல்வர் பழனிசாமியை சந்தித்து பேசினர்
Recommended Video

காத்திருக்கச் சொன்ன முதல்வர்
ஜாக்டோ ஜியோ அமைப்பை சேர்ந்த 5 நிர்வாகிகளுடன் சுமார் 30 நிமிடங்கள் முதல்வர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். வேலைநிறுத்தத்தை கைவிட வேண்டும் என்றும் நவம்பர் இறுதி வரை பொறுத்திருக்குமாறு அவர் கேட்டுக் கொண்டதாகவும் தெரிகிறது.
ஆலோசித்து முடிவு
இதனையடுத்து போராட்டத்தை தொடர்வதாக வேண்டாமா என்று அனைத்து நிர்வாகிகளுடன் பேசி முடிவெடுக்க உள்ளதாக ஜாக்டோ ஜியோ அமைப்பின் இளங்கோவன் கூறியுள்ளார். எனவே அறிவித்தபடி நாளை முதல் ஜாக்டோ ஜியோ அமைப்பினரின் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறுமா என்று சந்தேகம் எழுந்துள்ளது.
போராட்டத்தில் உறுதி
இதனையடுத்து போராட்டத்தை தொடர்வதா வேண்டாமா என்று ஜாக்டோ ஜியோ அமைப்பினர் ஈரோட்டில் ஆலோசனை நடத்தினர். முடிவில் செப்டம்பர் 7 மற்றும் 8ம் தேதிகளில் திட்டமிட்டபடி 76 சங்கங்களைச் சேர்ந்தவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளனர்.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications