For Daily Alerts
Just In
ஜல்லிக்கட்டு- ஆரணியில் கல்லூரி மாணவர் தீக்குளிக்க முயற்சியால் பரபரப்பு
ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி ஆரணியில் கல்லூரி மாணவர் இப்ராகிம் தீக்குளிக்க முயற்சித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர்: ஆரணியில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடந்த பேரணியில் மாணவர் இப்ராகிம் என்பவர் திடீரென தீக்குளிக்க முயற்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கான மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். தமிழகத்தின் அனைத்து நகரங்களுமே போர்க்களமாக காட்சி தருகிறது.
ஆரணி கோட்டை மைதானத்திலும் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் ஒன்று திரண்டு போராடி வருகின்றனர். இப்போராட்டத்தின் போது வேலூர் அரசு கலைக் கல்லூரி மாணவர் இப்ராகிம் திடீரென உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சித்தார்.
சக மாணவர்கள் அவரை தடுத்து நிறுத்தினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Comments
English summary
A Govt. College Student Ibrahim attempts self-immolation in Aarani at the Jallikattu protest.
Story first published: Wednesday, January 18, 2017, 14:13 [IST]