அனைத்து மாநிலங்களுக்கும் கணிசமான நிதியை மத்திய அரசு ஒதுக்க வேண்டியது அவசியம்
Subscribe to Oneindia Tamil

அந்த அறிக்கையின் தொடக்கத்தில், மத்திய அரசிடம் இருந்து மாநிலங்களுக்கு நிதி வழங்குவதன் முக்கிய நோக்கமே மாநிலங்களுக்கிடையே நிலவும் ஏற்றத் தாழ்வை களைவது தான் என்று கூறப்பட்டுள்ளது. இது தவறானது.
இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி நிர்வாக வசதிக்காக வரி விதிக்கவும், வரி வசூல் செய்யவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. மற்றொரு பக்கத்தில் மாநில அரசுகள் போலீஸ், சட்டம் - ஒழுங்கை பராமரித்தல், நீதி நிர்வாகம், சுகாதாரம், கல்வி, வேளாண்மை, சாலை, குடி தண்ணீர் சப்ளை உள்பட பல்வேறு அத்தியாவசியப் பணிகளை செய்ய வேண்டியதுள்ளது.
எனவே கணிசமான நிதியை எல்லா மாநிலங்களுக்கும் மத்திய அரசு ஒதுக்க வேண்டியது அவசியம். ஆனால் டாக்டர் ரகுராம் ராஜன் கமிட்டியின் அறிக்கையில் இந்த முக்கிய அம்சம் முழுமையாக விடுபட்டுள்ளது.












Click it and Unblock the Notifications