எதிலுமே முழுமை இல்லாத ரகுராம் ராஜன் கமிட்டி அறிக்கை!

இந்த நிலையில் மாநிலங்களுக்கு வழங்கப்படும் பெரிய நிதி ஒதுக்கீடுகள் மத்திய அரசின் முக்கிய திட்டங்கள் வழியாக வழங்கப்படுகிறது. இதனால் ஒவ்வொரு திட்டத்தின் குறிப்பிட்ட வழிகாட்டுதல் படியே மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்யும்.
இந்தியாவில் உள்ள 28 மாநிலங்களில் வளர்ந்த மாநிலங்கள் வரிசையில் தமிழ் நாட்டுக்கு 3-வது இடத்தை டாக்டர் ரகுராம் ராஜனின் கமிட்டி வரையறுத்துள்ளது. இது தொடர்பான தகவலில் மாநிலத்தில் தேவை பற்றி மட்டுமே பிரதிபலிக்கப்பட்டுள்ளது. பல முக்கிய விஷயங்கள் கருத்தில் கொள்ளப்படவில்லை.
வறுமை விகிதம் ஒரு குறியீடாக எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் வறுமை அளவு தொடர்பாக ஏற்கனவே பெரிய குழப்பமும், முரண்பாடான தகவல்களும், துல்லியம் இல்லாத நிலையே உள்ளது.
மேலும் இந்த புதிய வறுமை விகித அளவு தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்துக்கு கூட பயன்படுத்தப்படவில்லை.
அது போல பெண் கல்வி அளவும் எடுக்கப்பட்டுள்ளது. இதில் ஆண்- பெண் கல்வி இடைவெளி பற்றி கணக்கெடுத்திருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும்.
தாழ்த்தப்பட்ட, மலைவாழ் இன மக்கள் தொகை அளவை வைத்து மாநிலத்தின் பிற்ப்பட்ட அளவை எடுத்துள்ளனர். அதுவும் முழுமையானதாக இல்லை.
ஒரு மாநிலத்தில் உள்ள குடிசை வாழ் மக்களின் எண்ணிக்கையும் குறியீடாக எடுக்கப்பட்டிருக்க வேண்டும். இது போல சில முக்கிய விஷயங்கள் விடுபட்டுள்ளன.
முக்கியமான ஒரு தனி மனிதருக்கு குடிப்பதற்கும், விவசாய தேவைக்கும் கிடைக்கும் தண்ணீர் பற்றி குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். அது புறக்கணிக்கப் பட்டுள்ளது. அது போல காற்று மாசு, தண்ணீர் மாசு உள்ளிட்ட சுற்றுச்சூழல் பற்றியும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை.












Click it and Unblock the Notifications