'அம்மா'வுக்கு ஜாமீன் மறுப்பு: தமிழக-கர்நாடக எல்லையில் பதட்டம்
சென்னை: ஜெயலலிதாவுக்கு ஜாமீன் மறுக்கப்பட்டுள்ள நிலையில் தமிழக-கர்நாடக எல்லையில் பதட்டம் நிலவுகிறது.
சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பெங்களூர் பரப்பன அக்ரஹாரா நீதிமன்றம் கடந்த 27ம் தேதி தீர்ப்பு வழங்கியது. இதைத் தொடர்ந்த ஜெயலலிதா பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார்.

இதையடுத்து ஜெயலலிதா ஜாமீன் கோரி கர்நாடக நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனு மீதான விசாரணையை நீதிபதி ரத்னகலா அக்டோபர் 6ம் தேதிக்கு ஒத்தி வைத்தார். பின்னர் ஜெயலலிதா சார்பில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனு மீதான விசாரணை அக்டோபர் 7ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. அதன்படி ஜாமீன் மனு மீது இன்று விசாரணை நடந்தது.
மனுவை விசாரித்த நீதிபதி சந்திரசேகரா ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்க மறுத்துவிட்டார். முன்னதாக ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கிடைத்ததாக பரவிய தகவலால் மகிழ்ச்சி அடைந்த அதிமுகவினர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். ஆனால் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கிடைக்கவில்லை என்று தெரிந்ததும் பலர் கண்ணீர் விட்டு அழுதனர்.
ஜாமீன் மறுக்கப்பட்டதையடுத்து தமிழக-கர்நாடக எல்லையில் பதட்டமான சூழல் நிலவுகிறது.
-
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட்












Click it and Unblock the Notifications