"நான்கு மாதத்தில் ஜெயா நினைவில்லம் ரெடி" - சென்னை கலெக்டர் அறிவிப்பு
ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லம் இன்னும் நான்கு மாதங்களில் நினைவில்லமாக மாற்றப்படும் என சென்னை ஆட்சியர் அன்புச்செல்வம் தெரிவித்துள்ளார்.
சென்னை: பல்வேறு அரசு துறையினர் வேதா இல்லத்தை நினைவில்லமாக மாற்று பணியில் தீவிரமாக இறங்கியுள்ளதாகவும், அதனால் இன்னும் நான்கு மாதங்களில் ஜெயலலிதாவின் நினைவில்லம் தயாராகி விடும் என சென்னை ஆட்சியர் அன்புச்செல்வம் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசியலில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துக்கொண்டு வரும் நிலையில், மறுபக்கம் சத்தமே இல்லாமல் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த வீடு நினைவில்லமாக மாற்றும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சென்னை ஆட்சியர் அன்புச்செல்வம், ஜெயலலிதாவின் முன்னாள் வாரிசு யார் என்று தெரியும் வரை நாங்கள் காத்துக்கொண்டிருக்க மாட்டோம். இந்த இடத்திற்கான மதிப்பை கணக்கிட்டு அதற்கு பணத்தை நாங்கள் நீதிமன்றத்தில் டெபாசிட் செய்து விடுவோம். வாரிசு யார் என்று முடிவாகிறதோ அவர்கள் அந்த பணத்தை நீதிமன்றத்திலிருந்து பெற்றுக்கொள்ளலாம் என்று கூறினார்.
வேதா இல்லத்தில் சில அறைகளை வருமான வரித்துறை அதிகாரிகள் பூட்டுப்போட்டு சீல் வைத்துள்ளனர். அதனால் அவற்றின் மதிப்பு தெரியவில்லை, விரைவில் வருமான வரித்துறை அதிகாரிகள் முன்னிலையில் அந்த அறையை நாங்கள் அளப்போம். அதன்பின் இந்த வீட்டின் தற்போதைய மார்க்கெட் மதிப்பு தெரியவரும், 20பேர் கொண்ட குழு இந்த பணியில் ஈடுபட்டுள்ளது.
விரைவில் இந்த பணிகள் முடிவடைந்தவுடன், நினைவில்லமாக மாற்றும் பணி தொடங்கும், இந்த பணி நான்கு மாதங்களில் நிறைவடைந்து அதன் பின் அரசின் ஆணைப்படி மக்களின் பார்வைக்காக திறக்கப்படும் என்றும் ஆட்சியர் அன்புச்செல்வம் தெரிவித்துள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications