நான் போட்டியிட்டால் தோல்வியைடைந்து விடுவோம் என்று அதிமுகவிற்கு பயம்!... ஜெ. தீபா பகீர் குற்றச்சாட்டு

அதிமுகவின் தோல்விபயம் காரணமாக ஆர்.கே நகர் தேர்தலில் தன்னுடைய வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளதாக ஜெ. தீபா குற்றம்சாட்டியுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை : ஆர்கே நகர் தேர்தலில் தான் போட்டியிட்டால் அதிமுகவிற்கு தோல்வி நிச்சயம். அந்த பயம் காரணமாகவே தன்னுடைய வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளதாக ஜெ. தீபா தெரிவித்துள்ளார்.

சென்னை ராதாகிருஷ்ணன் நகர் தேர்தலில் போட்டியிட தாக்கல் செய்த வேட்புமனு நிராகரிக்கப்பட்டது குறித்து ஜெ. தீபா சென்னையில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது : என்னுடைய வேட்பு மனுநிராகரிக்கப்பட்டது திட்டமிட்ட சதி. இரண்டு நாட்களுக்கு முன்னர் தான் அதிமுகவின் மூத்த நிர்வாகி ஒருவரிடம் எனக்கு அழைப்பு வந்தது. நீங்கள் போட்டியிடாதீர்கள், அப்படி போட்டியிடாமல் இருந்தால் நாம் வேறு முறையில் அதை சமரசம் செய்து கொள்ளலாம் என்று சொன்னார்கள்.

Jayalalitha's nephew J.Deepa accuse charges that ADMK is the reason behind her nomination rejected

அப்படி மனு தாக்கல் செய்தால் எந்த அளவிற்கும் செல்வோம், உங்களது வேட்பு மனுவைக் கூட தள்ளுபடி செய்வோம் என்றெல்லாம் சொன்னார்கள். கடந்த முறை கூட எனக்கு இது போன்ற பல மிரட்டல்கள் வந்துள்ளன. என் மீது ஆசிட் வீசுவேன் என்றெல்லாம் கொலை மிரட்டல் கூட விடுத்தார்கள். ஆனால் நான் போட்டியிடுவேன் என்று உறுதியாக இருந்தேன்.

கடந்த முறையே மனுவை நிராகரிக்கச் செய்வோம் என்றார்கள், இந்த முறை அதை அவர்கள் செய்துள்ளனர். இந்த ஒற்றுமையாக இருப்பதால் அதை அவர்கள் செய்துள்ளனர்.

ஆர்கே நகர் மக்களுக்கு என்னைப் பார்க்கும் போதெல்லாம் அத்தையை பார்ப்பது போல உணர்வு ஏற்படுகிறது. என்னுடைய வாக்கு வங்கி அதிமுகவை பாதிக்கும் என்பதால் திட்டமிட்டு நான் போட்டியிடக் கூடாது என்று இப்படி ஒரு தேவையில்லாத காரணத்தை சொல்லி மனுவை நிராகரித்துள்ளனர் என்று தீபா குற்றம்சாட்டியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+