வர்தா புயலப்ப அம்மா நிலவேம்பு கஷாயம் குடிக்க சொன்னாங்க - திண்டுக்கல் சீனிவாசன்
வர்தா புயலின் போது முதல்வர் ஜெயலலிதா நிலவேம்பு குடிநீர் குடிக்கச் சொன்னதாக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளார்.
சென்னை: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்து 10 மாதங்கள் ஆகியுள்ள நிலையில் அவர் 6 மாதங்களுக்கு முன்னர் டெங்கு காய்ச்சலுக்கு நிலவேம்பு கஷாயத்தை குடிக்கச் சொன்னதாக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளார்.
தமிழகத்தில் டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளது. டெங்கு காய்ச்சலுக்கு அலோபதி மருந்து கை கொடுக்காததால், சித்த மருந்தை தமிழக அரசு பரிந்துரை செய்துள்ளது.

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மற்றும் அரசு நடத்தும் அனைத்து மருத்துவமனைகளிலும் டெங்கு உள்ளிட்ட காய்ச்சலால் பாதிக்கப் பட்டு வருபவர்களுக்கு நிலவேம்பு குடிநீர் கொடுக்கப்படுகிறது. நிலவேம்பு குடிநீர் வீடு வீடாக கொடுக்க அரசு சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
இதனிடையே காஞ்சிபுரம் மாவட்டம் கொளப்பாக்கத்தில் உள்ள மாநில வன ஆராய்ச்சி நிலையத்தில் நடைபெற்ற மருத்துவ தாவரங்கள் சாகுபடி மற்றும் வர்த்தகம் தொடர்பான தேசிய பயிலரங்க துவக்க விழாவில் பேசிய வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வனக் காவலர்களுக்கு சான்றிதழ்களை வழங்கிப் பேசிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், மறைந்த முதல்வர் ஜெயலலிதா கடந்த 6 மாதங்களுக்கு முன்பு டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வை ஏற்படுத்தி, நிலவேம்பு கசாயத்தை குடிக்கச் சொன்னதாக கூறினார்.
வர்தா புயல் வீசியபோது எங்களை அழைத்து பேசிய முதல்வர் அம்மா, அனைவரையும் நிலவேம்பு கசாயம் குடித்து பாதுகாத்துக்கொள்ள சொன்னதாக தெரிவித்தார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மரணமடைந்தார். வர்தா புயல் சென்னையை தாக்கிய போது முதல்வராக ஓ.பன்னீர் செல்வம் இருந்தார். இது பற்றிய எந்த நினைவும் இல்லாமல் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியது சலசலப்பை ஏற்படுத்தியது.
வரலாறு மிகவும் முக்கியம் அமைச்சரே!
ஒருவேளை அம்மாவின் ஆன்மா வந்து சொல்லியிருக்குமோ? இருந்தாலும் இருக்கும் !
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications