ஜெசிந்தா பாண்டியன் கொலை வழக்கு: குற்றம்சாட்டப்பட்ட 9 பேரையும் விடுதலை செய்தது தூத்துக்குடி கோர்ட்
தூத்துக்குடி: தூத்துகுடியில் 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜெசிந்தா பாண்டியன் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 9 பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது தூத்துக்குடி நீதிமன்றம்.
அகில இந்திய தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு தலைவராக இருந்தவர் பசுபதிபாண்டியன். ஏற்கனவே பல்வேறு கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்ட இவருக்கும், மூலைக்கரை பண்ணையார் குடும்பத்தினருக்கும் இடையில் கடந்த 1990 வருடம் புல்லாவெளி கிராமத்தினரின் உப்பளத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவது தொடர்பான பிரச்சினையில் பகை மூண்டது.

இதனையடுத்து, பசுபதி பாண்டியன் புல்லாவெளி கிராம ஆதரவாளர்கள் 1993ல் பண்ணையார் குடும்பத்தினைச் சேர்ந்த அசுபதி பண்ணையாரைக் கொலை செய்தனர்.
இதற்கு பழிவாங்கும் முயற்சியாக பசுபதி பாண்டியனுக்கு பண்ணையார் குடும்பத்தினர் வைத்த குறியில், அவரது மனைவி ஜெசிந்தா பாண்டியன் 2006 ஆம் ஆண்டு ஏப்ரல் 7 ஆம் தேதியன்று எப்போதும்வென்றான் அருகே படுகொலை செய்யப்பட்டார். லாரியால் மோதியும், வெடிகுண்டு வீசியும் ஜெசிந்தா கொலை செய்யப்பட்டார்.
இதுதொடர்பாக மூலக்கரையை சேர்ந்த அசுபதி பண்ணையார் மகன் சுபாஷ் பண்ணையார் உட்பட 12 பேர் மீது எப்போதும்வென்றான் போலீசார் வழக்குபதிவு செய்தனர்.
இவ்வழக்கில் சுபாஷ் பண்ணையார், தனசிங், சுரேஷ், செந்தில், மாயா, சிவலிங்கம், அருள் ராஜ், மோகன், வளன், பழனி, தாராசிங், குமார் ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
இதில், செந்தில், வளன் ஆகியோர் இதுவரையில் போலீசாரால் கைது செய்யப்படவில்லை. 12 பேரில் ஒருவரான மாயா என்பவர் இறந்து விட்டார். குற்றம் சாட்டப்பட்ட மற்ற 9 பேர் மீதும் தூத்துக்குடி முதலாவது அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.
10 ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கில் இன்று நீதிபதி பால்துரை தீர்ப்பளித்தார். குற்றம் சாட்டப்பட்ட 12 பேரின் மீதான குற்றச்சாட்டுகள் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை என்பதால் 9 பேரையும் விடுவித்து நீதிபதி உத்தரவிட்டார். இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி பால்துரை இன்னும் ஒரு மாதத்தில் பணியிலிருந்து ஓய்வு பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெசிந்தா கொல்லப்பட்ட ஜந்து ஆண்டுகளுக்குப் பின்னர் ஜனவரி 10 , 2012 அன்று திண்டுக்கல் மாவட்டம் நந்தவனப்பட்டியில் அவருக்குச் சொந்தமான வீட்டின் முன்பு பசுபதி பாண்டியன் வெட்டிக் கொலை செய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ் -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்! -
வில்லிவாக்கத்தில் நானே வேட்பாளர் என நினைத்துக் கொள்ளுங்கள்.. நண்பனுக்காக களம் இறங்கிய சபரீசன் பேட்டி -
கிரவுண்ட் ஜீரோ ரிப்போர்ட்.. தரைதட்டிய களப்பணி.. கிரவுண்டில் திணறும் தவெக.. விஜய்க்கு சிம்ம சொப்பனம் -
பாஜக வேட்பாளர் பட்டியல் வந்ததுமே அண்ணாமலை கொடுத்த முதல் ரியாக்ஷன்!












Click it and Unblock the Notifications