மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப தீர்ப்பு வழங்க முடியாது: சென்னை ஹைகோர்ட் தலைமை நீதிபதி பேச்சு
பெரும்பான்மை மக்களின் கருத்தும், எதிர்பார்ப்பும் வேறு வகையில் உள்ளன. ஆனால் அவர்களின் விருப்பத்தை கோர்ட்டால் நிறைவேற்ற முடிவதில்லை என தலைமை நீதிபதி கவுல் தெரிவித்தார்.
சென்னை: பெரும்பான்மையான மக்களின் விருப்பங்களுக்கு ஏற்றவாறு தீர்ப்பு வழங்க முடியாது என சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் கூறினார்.
சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் இன்று நாட்டின் 68வது குடியரசு தின விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் பங்கேற்று, தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.

இதன்பிறகு விழாவில் அவர் பேசியதாவது: இந்திய அரசியலமைப்பு சட்டம் உலகத்திற்கே எடுத்துக்காட்டாக உள்ளது. நமது நாட்டில் உள்ள சட்ட திட்டங்களுக்குட்பட்டுதான் தீர்ப்புகளை வழங்க வேண்டியுள்ளது. தீர்ப்பு வழங்கும்போது சட்ட திட்டங்களைதான் நீதிபதிகள் கருத்தில் கொள்வார்கள்.
நமது நாட்டில் சட்டத்துறை முக்கிய அங்கம் வகிக்கிறது. பல நேரங்களில் பெரும்பான்மை மக்களின் கருத்தும், எதிர்பார்ப்பும் வேறு வகையில் உள்ளன. ஆனால் அவர்களின் விருப்பத்தை கோர்ட்டால் நிறைவேற்ற முடிவதில்லை. சட்டப்படிதான் நீதிபதிகள் செல்ல வேண்டிவரும். இவ்வாறு சஞ்சய் கிஷன் கவுல் தெரிவித்தார்.
ஜல்லிக்கட்டுக்காக தமிழகத்தில் உள்ள பெரும்பாலான இளைஞர்களும், பொதுமக்களும் பெரும் புரட்சியையே நடத்தி காட்டினர். இந்த நிலையில், ஜல்லிக்கட்டு சட்டத்திற்கு தடை கேட்டு சுப்ரீம் கோர்ட்டில் சில அமைப்புகள் வழக்கு தொடர்ந்துள்ளன.
இந்த சூழ்நிலையில், தலைமை நீதிபதியின் கருத்து முக்கியத்துவம் பெறுகிறது.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications