இயக்குநர் கே. பாலசந்தரின் வெண்கல சிலை திறப்பு... கமல் பங்கேற்கவில்லை
இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரின் பிறந்தநாளையொட்டி இன்று அவரது வெண்கல சிலை திறக்கப்படவுள்ளது.
நன்னிலம்: இயக்குநர் கே.பாலசந்தரின் பிறந்தநாளான இன்று அவரது திருவுருவச் சிலை அவர் பிறந்த ஊரான நல்லமாங்குடியில் திறந்து வைக்கப்பட்டது. இந்த விழாவில் கலந்து கொள்வதாக இருந்த கமல் பங்கேற்கவில்லை.
திருவாரூர் மாவட்டத்தில் நன்னிலம் அருகே உள்ள நல்லமாங்குடி என்ற கிராமத்தில் ஜூலை 9-ஆம் தேதி 1930-ஆம் ஆண்டு பிறந்தவர் கே.பாலசந்தர். இவர் எம்ஜிஆரின் தெய்வத்தாய் என்ற படம் மூலம் தமிழ் திரையுலகில் வசனகர்த்தாவாக அறிமுகமானார்.

பின்னர் 1965-இல் நாகேஷ் கதாநாயகனாக நடித்த நீர்க் குமிழி என்ற படம் மூலம் இயக்குநர் அவதாரம் எடுத்தார். அதைத் தொடர்ந்து சர்வர் சுந்தரம், மேஜர் சந்திரகாந்த், பாமா விஜயம், அபூர்வ ராகங்கள் உள்ளிட்ட படங்கள் அவருக்கு ஹிட்டை கொடுத்தன.
எம்ஜிஆர் - சிவாஜி போன்றவர்கள் காலத்தில் அவர்களின் பாணியை விட்டு விலகி, பாலசந்தரின் திரைப்படங்கள் யதார்த்தமான நடுத்தர மக்களின் பிரச்சினைகளைப் பேசின.
கருப்பு வெள்ளை காலத்திலும் முக்கியமான கதாபாத்திரங்களை வலுவாகப் படைத்த பாலசந்தரின் படைப்புத்திறன் அஃறிணைகள் மூலம் மனிதனால் பேச முடியாத விஷயங்களை பேசவும் பாடவும் முற்பட்டது. ரஜினிகாந்த் உட்பட 100-க்கும் மேற்பட்டோரை தமிழ் சினிமாவில் அறிமுகம் செய்தவர் கேபி. கமல், ரஜினி, உள்பட ஏராளமான நட்சத்திரங்களை வைத்து ஹிட் படங்களை கொடுத்தவர் பாலசந்தர்.
வேலைக்குப் போகும் பெண்கள், இருதாரப் பிரச்சினைகள், முறைதவறும் உறவுகள், சமூக புறக்கணிப்புகள், போராட்டங்கள், அரசியல், உள்பட அனைத்தையும் அவரது கதைகள் அலசப்பட்டு வெற்றியும் பெற்றன.
இயக்குநர் சிகரம் என்று போற்றப்படும் கே.பாலசந்தர் கடந்த 2014-ஆம் ஆண்டு டிசம்பர் 23-ஆம் தேதி மறைந்தார். இந்நிலையில் அவரது பிறந்த நாளான இன்று அவரது சொந்த ஊரில் அவருக்கு சிலை திறக்க கவிஞர் வைரமுத்து முடிவு செய்தார். அதன்படி நல்லமாங்குடியில் இன்று மாலை 6 மணிக்கு பாலசந்தரின் சிலையை கவிஞர் வைரமுத்து திறந்து வைத்தார்.
நடிகர் கமல்ஹாசன் முன்னிலையில் கேபி சிலையை திறந்து வைப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில் அவர் பங்கேற்கவில்லை. விழாவில் இயக்குநர்கள் மணி ரத்னம், வசந்த், தயாரிப்பாளர் பிரமிட் நடராஜன், கவிஞர் வைரமுத்து ஆகியோர் பங்கேற்றனர்.
-
தவெக அருண்ராஜ் படத்துடன்.. வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய இருந்த சில்வர் பாத்திரங்கள் பறிமுதல்! -
என்னது துணை முதலமைச்சர் பதவி தராங்களா.. விஜய் தான் முதலமைச்சர்.. செங்கோட்டையன் தடாலடி -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
கொட்டிய ஆலங்கட்டி மழை.. கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் ஐஸ் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி! -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
விஜய் ஏமாத்திட்டாரு.. பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்.. திமுகவில் இணையும் செங்கோட்டையன்? -
Annamalai: 80 சீட்+ துணை முதல்வர் பதவி? பாஜக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? அண்ணாமலை கொடுத்த விளக்கம் -
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி!












Click it and Unblock the Notifications