For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கச்சத்தீவு அந்தோணியார் ஆலயத் திருவிழா – மீனவர்கள் கடலுக்குச் செல்ல தற்காலிக தடை

Google Oneindia Tamil News

ராமேஸ்வரம்: கச்சத்தீவில் புனித அந்தோணியார் திருவிழா நடை பெறுவதால் இன்று முதல் 5 நாட்களுக்கு கடலுக்கு செல்ல மீனவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

கச்சத்தீவில் புனித அந்தோணியார் ஆலய திருவிழா வருகிற 28 ஆம் தேதி மற்றும் மார்ச் 1 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த திருவிழாவிற்கு செல்வதற்காக சுமார் 5 ஆயிரம் பேர் பெயர் பதிவு செய்துள்ளனர்.

Kachateevu Anthoniyar church festival begins…

இதேபோல் கோவிலுக்கு செல்லும் பக்தர்களை ஏற்றி செல்வதற்காக 105 விசைப்படகுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதையொட்டி இன்று 25 ஆம் தேதி முதல் வருகிற 1 ஆம் தேதி வரை 5 நாட்கள் ராமேஸ்வரம் விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்லாது என்று மீன்வளத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இன்று திருவிழாவிற்கு பயணிகளை ஏற்றிச் செல்லவிருக்கும் 105 படகுகளையும் மீன்வளத் துறையினர் சோதனை செய்ய உள்ளனர்.

English summary
Rameswaram Fisher men stopped temporarily to go on inside the sea for Kachateevu Anthoniyar church festival.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X