‘நாதத்தை’ இழந்தது ஏவுகணை நாயகன் கலாமின் வீணை
சென்னை: மறைந்த மக்கள் ஜனாதிபதி அப்துல்கலாமிற்கு வீணை வாசிக்கும் பழக்கம் உண்டு. நேரம் கிடைக்கும் போதெல்லாம் தன்னிடம் உள்ள பழமையான வீணையை அவர் வாசிப்பது வழக்கம்.
'பாரத ரத்னா" விருது பெற்ற முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் நேற்று, மேகாலயா மாநிலத்தில் உள்ள இந்திய மேலாண்மை கல்வி நிறுவனத்தில் உரையாற்றிக் கொண்டிருந்தபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி கீழே விழுந்து காலமானார். கலாமின் மரணத்திற்கு மத்திய அரசு 7 நாட்கள் அரசு முறை துக்கம் அறிவித்துள்ளது.
ஏவுகணை நாயகனாக திகழ்ந்தார், தன்னம்பிக்கை பேச்சுக்களுக்கு சொந்தக்காரர், கனவு காண ஊக்குவித்தார் என அப்துல் கலாம் குறித்து பேச நிறைய விசயங்கள் இருக்கின்றன.

இசை மீது தீராக்காதல்...
நாட்டுக்காக தன் வாழ்நாள் முழுதும் உழைத்த மக்கள் ஜனாதிபதிக்கு இசை மீதும் தீராக் காதல் இருந்தது. ஆம், அப்துல் கலாமிடம் ஒரு பழமையான வீணை உண்டு. எப்போதாவது தனக்கு கிடைக்கும் ஓய்வு நேரத்தில் அந்த வீணையை வாசிப்பதை அவர் வழக்கமாக வைத்திருந்தார்.

தியாகராஜ கீர்த்தனைகள்...
மிகுந்த இசை ஞானம் பெற்றிருந்த கலாமுக்கு, தியாகராஜ கீர்த்தனைகளில் சில கிருதிகள் கூட தெரியும்.

ராஷ்ட்ரபதி பவனில் இசை நிகழ்ச்சிகள்...
தான் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் ராஷ்ட்ரபதி பவனின் மொகல் தோட்டத்தில் அவ்வப்போது இசை நிகழ்ச்சிகளையும் அவர் ஏற்பாடு செய்து நடத்தினார். இந்துஸ்தானி, கர்நாடக இசை, வில்லுப்பாட்டு என பல வகையான இசைக் கலைஞர்களை ஜனாதிபதிமாளிகையில் இசையமைக்க வைத்து அவர்களை கெளரவித்தார் கலாம்.

டிரம்ஸ் வாசித்த கலாம்...
ஒருமுறை டிரம்ஸ் சிவமணியின் இசை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. சிவமணியின் டிரம்ஸ் இசையை ரசித்துக் கொண்டிருந்த கலாம், திடீரென மேடையேறினார். சிவமணியிடம் டிரம்ஸ்வாசிப்பது குறித்து கேட்டறிந்தவர் அடுத்த சில நிமிடங்களில் தானும் வாசித்துக் காட்டி பார்வையாளர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார்.

பாராட்டு...
கூடியிருந்தவர்கள் கரகோஷம் எழுப்பி கலாமை பாராட்டிய நிலையில், சிவமணியிடம் சில நிமிடங்கள் தனியேபேசி அவரை பாராட்டி விட்டு கீழே இறங்கினார் கலாம்.

தோட்டக்கலை...
இசையைப் போலவே, தோட்டக்கலையிலும் ஆர்வம் காட்டியவர் கலாம். வழக்கமாக ஜனாதிபதி மாளிகை பொது மக்களுக்காக திறக்கப்படாது. ஆனால், அதை பள்ளிக் குழந்தைகளுக்காக திறந்துவிட்டவர் கலாம்.

மூலிகைத் தோட்டம்...
தான் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் ராஷ்ட்ரபதி பவனில் தான் உருவாக்கியுள்ள மூலிகைத் தோட்டத்தை குழந்தைகளுக்குச் சுற்றிக் காட்டுவதை நேரம் கிடைக்கும்போதெல்லாம் ஒரு பணியாகவே செய்து வந்துள்ளார் கலாம்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications