கூட்டம் கூட்டமாக அரசியலில் குதிக்கும் நடிகர்கள்.. அடுத்து குதிக்கப் போவது யாரு!
Recommended Video

சென்னை: கமல், விஷால், பாஸ் என்கிற பாஸ்கரன் ஆகியோர் கட்சியை தொடங்கிவிட்ட நிலையில் விஜய், சிம்பு, விஜய் சேதுபதி, சித்தார்த், மன்சூர் அலிகான் உள்ளிட்டோர் எப்போது கட்சியை தொடங்குவர் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.
அரசியல் கட்சி தொடங்குவது என்றால் மக்கள் பணியாற்றிவிட்டு பல்வேறு போராட்டங்களுக்காக சிறைக்கு செல்வது , தனக்கென தொண்டர்கள் கூட்டத்தை வைத்துக் கொண்டு பிறகு கட்சியை ஆரம்பிப்பது ஆகும்.
தேர்தல் பிரசாரத்தின் போது தான் இதை செய்தேன், அதை செய்தேன் என பட்டியலிடுவதற்கு வசதியாக நலத்திட்டம், தண்ணீர் பந்தல் ஆகிய காரியங்களில் ஈடுபடுவது வழக்கம்.

மக்களுக்கு நல்லது
ஆனால் தற்போது நிலைமை அப்படியில்லை. தனக்கென ஒரு ரசிகர் கூட்டம் இருந்து விட்டால் போதும். உடனே கட்சியை தொடங்கிவிடுகின்றனர் நடிகர்கள். இதில் சிலர் இயக்கத்தை தொடங்கி அதன் மூலம் மக்களுக்கு நல்லது செய்துவிட்டும் அரசியலுக்கு வருகின்றனர்.

ரஜினி
அந்த வகையில் கமல்ஹாசன் கடந்த பிப்ரவரி மாதம் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கினார். இவர் ஒரு செயலியையும் உருவாக்கி அதன் மூலம் மக்கள் தரும் புகாரை தமிழக அரசின் பார்வைக்கு கொண்டு செல்கிறார். ரஜினிகாந்தோ அரசியலுக்கு வருகிறேன் என்று சொன்னார். ஆனால் அவர் செப்டம்பர் 2-ஆவது வாரத்தில் கட்சியை தொடங்குவார் என்று தெரிகிறது.

கட்சி தொடக்கம்
ஆர் கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதாக கூறி போலி ஆவணங்களை தாக்கல் செய்ததாக வேட்புமனு நிராகரிக்கப்பட்ட விஷால் திடீர் காப்பி, டீ போல் ஒரு இயக்கத்தை உருவாக்கிவிட்டார். 99 சதவீதம் விஜய்யின் மக்கள் இயக்கத்தை அப்படியே காப்பி அடித்து தொடங்கிவிட்டார். பாஸ் என்கிற பாஸ்கரனும் இன்று அரசியல் கட்சியை தொடங்குகிறார்.

இயக்கம்
விஜய், சிம்பு, விஜய் சேதுபதி ஆகியோரும் அரசியலுக்கு வர வேண்டும் என அவரது ரசிகர்கள் விரும்புகின்றனர். இவர்களில் விஜய், விஜய் மக்கள் இயக்கம் என்ற இயக்கத்தை தொடங்கியுள்ளார். சிம்புவோ இன்னும் எந்த இயக்கத்தையும் தொடங்கவில்லை. ஆனால் அவரது தந்தை டி.ராஜேந்தரோ என் மகன் அரசியலுக்கு வருகிறேன் என்றால் அவர் பின்னால் தமிழகமே நிற்கும் என்று கூறியுள்ளார்.

ஏராளம்
அதுபோல் விஜய் சேதுபதி, ஜி.வி. பிரகாஷ், சித்தார்த், மன்சூர் அலிகான் உள்ளிட்டோர் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து அவ்வபோது டுவிட்டரில் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். எனவே இவர்களும் அரசியலில் குதிக்கும் எண்ணத்தில் உள்ளனரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

கொடி
அரசியலுக்கு வருவது அவரவர் விருப்பம். ஆனால் சினிமாவில் மக்கள் மனதை கொள்ளை கொண்ட இவர்கள் அரசியலிலும் சாதிப்பார்களா என்பது போக போகத்தான் தெரியும். போகிற போக்கை பார்த்தால் வீதிக்கு ஒரு கட்சி வீட்டுக்கு ஒரு கொடி என்ற நிலைமை ஆகிவிடும் போல!.
-
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
விஜய்யால் ராஜ்யசபா எம்பியாகும் செல்வபெருந்தகை? குறுக்கே நிற்கும் பிரவீன் சக்கரவர்த்தி! லக் யாருக்கு? -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
விஜய்: எந்த பயனும் இல்லை.. பிடிங்க.. நீங்க கொடுத்த ரூ.5000 + 1 ரூபாய்.. ஈரோடு விவசாயிகள் அதிரடி! -
டிடிவி தினகரன் பார்வை படாதா என பம்மியது மறந்து போச்சா? அமைச்சர் CTR நிர்மல்குமாருக்கு அமமுக பதிலடி -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
மம்தாவுக்கு புது பிரச்சனை.. இரண்டாக உடையும் திரிணாமுல் காங்கிரஸ்! யார் அந்த கருப்பு ஆடு? -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர்












Click it and Unblock the Notifications