இலக்கிய நடையை விட்டு திடீர்னு டவுன் டூ எர்த் ஸ்டைலுக்கு மாறிய கமல்!
சென்னை: கமல்ஹாசனின் டிவிட்டர் பதிவுகளில் உள்ள அர்த்தம் என்ன என்று புரிந்துகொள்வதில் சிரமம் இருக்கும். ஆனால் இன்றைய அறிக்கையில் இலக்கிய நடையை விட்டுவிட்டு சாதாரண மொழி நடையில் அமைந்துள்ளது.
நடிகர் கமல்ஹாசனின் கருத்துக்கள் சமூக வலைதளங்களிலும் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வரும் நிலையில் இன்று ரசிகர்களுக்கும், பொதுமக்களுக்கும் வேண்டுகோள் விடுத்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

ஜல்லிக்கட்டு ஆதரவு
ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் நடிகர் கமல்ஹாசன் சமூக வலைதளங்கள் மூலமாக பல்வேறு கருத்துகளை வெளியிட்டு வருகிறார். ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது முதல் ஆளாக வந்து ஆதரவு தெரிவித்ததோடு, கலவரத்தின் போது நடத்தப்பட்ட தடியடிக்கும் கண்டனம் தெரிவித்திருந்தார். இதே போன்ற ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் பதவியில் இருந்து இறக்கப்பட்டதையும் கமல் விமர்சித்திருந்தார்.

அரசியலும் கமலும்
இதுவரை அரசியலுக்கு வருவீர்களா என்ற கேள்விகளுக்கு கமல்ஹாசன் வெளிப்படையாக எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. ஆனால் சமீபத்தில் அவரது கருத்துக்கள் அரசியல் சார்ந்தவையாகவே உள்ளது. அரசின் எல்லாத் துறைகளிலும் ஊழல் இருப்பதாக சுட்டிக் காட்டினார். அதற்கு ஆளும் கட்சித் தரப்பில் கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது.

புரியாத கவிதை
கமலின் டிவிட்டர் பதிவுகள் எப்போதும் பரபரப்பை கிளப்பும். ஆனால் அவரது பதிவுகள் பெரும்பாலானவை கவிதை வடிவில் இருபக்கும். சாமானியர்களால் புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு கடுமையான தமிழ் நடை, புரியாத வாக்கியங்கள், சமயத்தில் கடும் எழுத்துப் பிழைகளுடன் வருகின்றன. நேற்றைக்கு கமலின் டுவிட்டர் பதிவால் அவரது ரசிகர்கள் உள்பட அனைவரும் அதன் அர்த்தம் என்ன என்று புரிந்துகொள்ள முடியாமல் திணறினர்.

சாதரண தமிழுக்கு மாறிய கமல்
இன்றைக்கு கமல் கூறியுள்ள கருத்துக்கள் இலக்கிய நடை இல்லாமல் சாதராண மொழி நடையில் அனைவரும் புரிந்துகொள்ளும் விதமாக அமைந்துள்ளது. அவரது அறிக்கையில், "ஊழலே இல்லா நிரூபி பாப்போம்னு அமைச்சர் கேட்டார்ல.? ஊழல் இருக்குன்னா எழுதி அனுப்பிடுங்க. கார்டு, கவர்ல, கடுதாசில வேணாம். கிழிச்சிப் போட்டுட்டுப் போயிட்டே இருப்பாங்க. டிஜிட்டல் யுகம் இது. டிஜிட்டலா பதிவு செய்ங்க. ஆனா மரியாத தவறாம அதச் செய்ங்க." கமலின் அறிக்கை பாமர மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் உள்ளது.












Click it and Unblock the Notifications