கார்த்தி சிதம்பரம் வெற்றிக்காக மண்சோறு சாப்பிட்ட ஆதரவாளர்கள்
சென்னை: சிவகங்கை லோக்சபா தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் கார்த்தி ப.சிதம்பரம் வெற்றி பெற வேண்டி சென்னையில் அவரது ஆதரவாளர்கள் மண்சோறு சாப்பிட்டனர்.
தமிழக காங்கிரஸ் சேவா தள அமைப்பு செயலாளர் எஸ்.எம்.குமார் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடினார்.
இதையொட்டி நுங்கம்பாக்கம் கற்கோடி அம்மன் ஆலயத்தில் சிறப்பு வழிபாடு நடத்தி சிவகங்கை தொகுதியில் கார்த்தி ப.சிதம்பரம் வெற்றி பெற வேண்டி மண்சோறு சாப்பிட்டார்.
அவருடன் ராயப்பேட்டை பாஸ்கர், அய்யனார், ஆறுமுகம், ராசு, மகாலிங்கம், சுந்தர், ராஜா, ராமு உள்பட சுமார் 30 பேர் மண்சோறு சாப்பிட்டனர்.
எஸ்.எம்.குமார் தனது பிறந்தநாளையொட்டி கார்த்தி ப.சிதம்பரத்திடம் வாழ்த்து பெற்றார். மத்திய அமைச்சர் ப.சிதம்பரமும் வாழ்த்து செய்தி அனுப்பினார்.
சேவாதள தலைவர் கோவை செல்வராஜ், இசையமைப்பாளர் சங்கர்கணேஷ், வள்ளல்பெருமான், அருள் பெத்தையா, மத்திய சென்னை மாவட்ட தலைவர் ரங்கபாஷ்யம், இளைஞர் காங்கிரஸ் தலைவர் விஜய இளஞ்செழியன், தொழில் அதிபர் ராஜாமணி, சிறு புரோமட்டர் ரவி உள்பட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications