கடும் மூச்சு திணறலால் கருணாநிதி அவதி.. செயற்கை சுவாசம் தரப்படுவதாக தகவல்
கருணாநிதிக்கு கடும் மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
Recommended Video
சென்னை: கருணாநிதிக்கு கடும் மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளதாகவும் அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
கருணாநிதி காவேரி மருத்துவமனையில் கடந்த 11 நாட்களாக சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு நேற்றைய தினம் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டது.
இதையடுத்து காவேரி மருத்துவமனை முன்பு ஏராளமான தொண்டர்கள் குவிந்தனர். இந்நிலையில் கருணாநிதிக்கு ரத்த அழுத்தம், ஆக்ஸிஜன் அளவு ஆகியன குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதற்காக மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்நிலையில் அவர் கடும் மூச்சு திணறலால் அவதிப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் அவருக்கு செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் 24 மணி நேரம் கழித்தே கருணாநிதியின் உடல்நிலை குறித்து கூற முடியும் என்று மருத்துவர்கள் கூறிவிட்ட நிலையில் தொண்டர்கள் கலக்கத்துடன் உள்ளனர்.