கருணாநிதியின் பணியை ஸ்டாலின் தொடர ஆற்றல் உள்ளது.. நினைவேந்தலில் காதர் மொஹைதீன் உருக்கம்
திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி நினைவேந்தல் கூட்டத்தில் கருணாநிதியின் பணியை ஸ்டாலின் தொடர ஆற்றல் உள்ளது என்று முஸ்லீக் லீக் தலைவர் காதர் மொஹைதீன் உருக்கமாக பேசினார்.
Recommended Video
சென்னை: திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி நினைவேந்தல் கூட்டத்தில் கருணாநிதியின் பணியை ஸ்டாலின் தொடர ஆற்றல் உள்ளது என்று முஸ்லீக் லீக் தலைவர் காதர் மொஹைதீன் உருக்கமாக பேசினார்.
மறைந்த முன்னாள் முதல்வரும், திமுக முன்னாள் தலைவருவமான கருணாநிதிக்கு தற்போது நினைவேந்தல் கூட்டம் நடத்தப்படுகிறது. இதற்கு கூட்டத்தில் அகில இந்திய தலைவர்கள் வருகை புரிந்துள்ளனர்.
தற்போது சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் தொடங்கி உள்ளது. இதில் கலந்து கொண்டு முஸ்லீக் லீக் தலைவர் காதர் மொஹைதீன் உருக்கமாக பேசினார்.
அதில், கருணாநிதியிடம் நாங்கள் சந்தித்தது மனம். அவர் மனதார எல்லோருடனும் பழகுவார். கருணாநிதி ஒரு அற்புதமான சரித்திர நாயகன்
சிகரத்தைத் தொட்டவர் கருணாநிதி. கருணாநிதி தொட்ட சிகரத்திற்கு மேல் எதுவும் இல்லை. கருணாநிதி ஒரு தனிப்பெரும் தலைவராக திகழ்ந்தவர். தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியா முழுக்க இப்படிப்பட்ட தலைவரை பார்க்க முடியாது.
கருணாநிதி இடதுசாரியா, வலதுசாரியா என்று கேட்கிறார்கள். அவர் கொள்கை என்ன என்று அவ்வப்போது விவாதம் நடக்கிறது. கருணாநிதி இடதுசாரியும், இல்லை வலதுசாரியும் இல்லை, மனிதாபிமானி.
கருணாநிதி இறந்த பிறகும் அவர் புகழ் விண்ணை தொட்டுள்ளது. கருணாநிதியின் பணியை ஸ்டாலின் தொடர ஆற்றல் உள்ளது. இந்தியா முழுமைக்கும், சமூக நீதி, சுயமரியாதை கொள்கையை ஸ்டாலின் பரப்ப வேண்டும்.
கருணாநிதி புகழ் என்றென்றும் வாழும்.ஒரு மனிதன் எவ்வளவு நாள் வாழ்ந்தார் என்பதை அவர் மறைந்த தினத்தில் இருந்து கணக்கெடுக்க வேண்டும்.கருணாநிதி மறைந்த பிறகும் கோடான கோடி இளைஞர்கள், மகளிர் போற்றி பாராட்டி வருகிறார்கள், என்று காதர் மொஹைதீன் குறிப்பிட்டுள்ளார்.