கருணாநிதியின் பணியை ஸ்டாலின் தொடர ஆற்றல் உள்ளது.. நினைவேந்தலில் காதர் மொஹைதீன் உருக்கம்
திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி நினைவேந்தல் கூட்டத்தில் கருணாநிதியின் பணியை ஸ்டாலின் தொடர ஆற்றல் உள்ளது என்று முஸ்லீக் லீக் தலைவர் காதர் மொஹைதீன் உருக்கமாக பேசினார்.
Recommended Video

சென்னை: திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி நினைவேந்தல் கூட்டத்தில் கருணாநிதியின் பணியை ஸ்டாலின் தொடர ஆற்றல் உள்ளது என்று முஸ்லீக் லீக் தலைவர் காதர் மொஹைதீன் உருக்கமாக பேசினார்.
மறைந்த முன்னாள் முதல்வரும், திமுக முன்னாள் தலைவருவமான கருணாநிதிக்கு தற்போது நினைவேந்தல் கூட்டம் நடத்தப்படுகிறது. இதற்கு கூட்டத்தில் அகில இந்திய தலைவர்கள் வருகை புரிந்துள்ளனர்.

தற்போது சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் தொடங்கி உள்ளது. இதில் கலந்து கொண்டு முஸ்லீக் லீக் தலைவர் காதர் மொஹைதீன் உருக்கமாக பேசினார்.
அதில், கருணாநிதியிடம் நாங்கள் சந்தித்தது மனம். அவர் மனதார எல்லோருடனும் பழகுவார். கருணாநிதி ஒரு அற்புதமான சரித்திர நாயகன்

சிகரத்தைத் தொட்டவர் கருணாநிதி. கருணாநிதி தொட்ட சிகரத்திற்கு மேல் எதுவும் இல்லை. கருணாநிதி ஒரு தனிப்பெரும் தலைவராக திகழ்ந்தவர். தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியா முழுக்க இப்படிப்பட்ட தலைவரை பார்க்க முடியாது.
கருணாநிதி இடதுசாரியா, வலதுசாரியா என்று கேட்கிறார்கள். அவர் கொள்கை என்ன என்று அவ்வப்போது விவாதம் நடக்கிறது. கருணாநிதி இடதுசாரியும், இல்லை வலதுசாரியும் இல்லை, மனிதாபிமானி.

கருணாநிதி இறந்த பிறகும் அவர் புகழ் விண்ணை தொட்டுள்ளது. கருணாநிதியின் பணியை ஸ்டாலின் தொடர ஆற்றல் உள்ளது. இந்தியா முழுமைக்கும், சமூக நீதி, சுயமரியாதை கொள்கையை ஸ்டாலின் பரப்ப வேண்டும்.

கருணாநிதி புகழ் என்றென்றும் வாழும்.ஒரு மனிதன் எவ்வளவு நாள் வாழ்ந்தார் என்பதை அவர் மறைந்த தினத்தில் இருந்து கணக்கெடுக்க வேண்டும்.கருணாநிதி மறைந்த பிறகும் கோடான கோடி இளைஞர்கள், மகளிர் போற்றி பாராட்டி வருகிறார்கள், என்று காதர் மொஹைதீன் குறிப்பிட்டுள்ளார்.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை












Click it and Unblock the Notifications