பெண்ணுரிமைப் போராட்டத்தில் பெரியாரின் பங்கு முக்கியமானது... பினராயி விஜயன்
கேரளாவில் வைக்கம் கோவில் நுழைவுப் போராட்டத்தில் பெரியாரின் பங்கு முக்கியமானது என்று முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார்.
மதுரை: கேரளாவில் வைக்கம் கோவில் நுழைவு போராட்டத்தில் பெரியாரின் பங்கு முக்கியமானது என்றும் பெண்களுக்கு சம உரிமை தர வேண்டும் என்றும் முதல்வர் பினராயி விஜயன் புகழாரம் சூட்டினார்.
மதுரையில் நடைபெற்ற தலித் ஒடுக்குமுறை எதிர்ப்பு முன்னணி மாநாட்டில் அவர் கலந்து கொண்டு பேசுகையில், ஜாதி ஒழிப்புக்காக தந்தை பெரியாரின் செயல்பாடுகள் இருந்தன. பெண்களுக்கு சம உரிமை தர வேண்டும் என பெரியார் போராடினார்.
கேரளாவில் வைக்கம் கோவில் நுழைவுப் போராட்டத்தில் பெரியாரின் பங்கு முக்கியமானது. தலித்துகளின் விடுதலைக்கான போராட்டத்தில் எல்லைகள் எதுவும் இல்லை. ஜாதிய ஒடுக்குமுறைகள் நாட்டின் ஒவ்வொரு பகுதியில் வித்தியாசமாக உள்ளது.

தலித் பெண்கள்
ஒவ்வொரு 18 நிமிடத்துக்கும் ஜாதிய ஒடுக்குமுறை நிகழ்ந்து வருகிறது. நாள்தோறும் 3 தலித் பெண்கள் பலாத்காரம் செய்து கொல்லப்படுகின்றனர். நாள்தோறும் 2 தலித் குடும்பங்களின் வீடுகள் ஆக்கிரமிப்பு செய்யப்படுகின்றன.

ம.பி.யில் தாக்குதல்
உ.பி. மாநிலம் சஹாரன்பூரில் தலித்துகள் மீது கொடூர தாக்குதல் நடத்தியதால் வெளியேறினர். இறந்த பசுவின் தோலை உரித்ததற்காக தலித்துகள் தாக்கப்பட்டனர். ம.பியில்தான் தலித்துகள் மீதான தாக்குதல்கள் அதிகம் நடைபெறுகின்றன.

குஜராத்தில் மிகவும் அதிகம்
ராஜஸ்தானிலும் மகாராஷ்டிராவிலும் தலித் பெண்கள் மீது தாக்குதல் நடத்தினர். டெல்லியில் துப்புரவுப் பணியில் ஈடுபட்ட 13 பேர் ஒருமாதத்தில் உயிரிழந்துள்ளனர். குஜராத்தில் தலித்துகள் மீதான தாக்குதல்கள் அண்மைகாலமாக அதிகரித்துள்ளன.

மேல்ஜாதி நடனத்தை ஆடியதற்கு...
163% தலித்துகள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. குஜராத்தின் உனாவ் கிராமத்தில் மாட்டு தோலை உரித்தார்கள் தலித் இளைஞர்கள் தாக்கப்பட்டனர். காந்திநகரில் மீசை வைத்ததற்காகவும் மேல்ஜாதி நாட்டியத்தை ஆடியதற்காகவும் தலித் இளைஞர்கள் தாக்கப்பட்டனர்.

ஆண்டுதோறும் அதிகம்
போர்பந்தரில் பொது இடத்தில் விவசாயம் செய்ததற்காக தலித்துகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. தலித் கர்ப்பிணி மீது தாக்கிய சம்பவங்களும் அரங்கேறியுள்ளன.
தேசிய குற்ற ஆவண காப்பகத் தகவலில் தலித்துகள் மீதான தாக்குதல்கள் ஆண்டுதோறும் அதிகரித்துள்ளன.

தண்டனையும் குறைவே
2012-ல் தலித்துகள் எதிராக 33,000 தாக்குதல்களும், 2015-ல் அது 45,000 தாக்குதல்களாக அதிகரிக்கவும் செய்துள்ளது. 2016-ல் தலித்துகளுக்கு எதிரான தாக்குதல்களை வெளியிடாதது உண்மையை மூடி மறைக்கும் முயற்சி ஆகும். தலித்துகள் மீதான தாக்குதல்களில் தண்டிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் குறைவாகவே வழங்கப்படுகிறது என்றார் அவர்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications