கறுப்பு பணம்: தமிழக - கேரள எல்லையில் தீவிர வாகன சோதனை
கருப்பு பண பதுக்கல் எதிரொலியாக தமிழக - கேரளா எல்லையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
செங்கோட்டை: கேரளாவில் இருந்து புளியரை வழியாக தமிழகத்திற்கு கறுப்பு பணம் கடத்துவதாக வந்த தகவலையடுத்து போலீசார் தீவிர வாகனச் சோதனை நடத்தி வருகின்றனர்.
நாடு முழுவதும் 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று பாரதப் பிரதமர் அறிவித்ததைத் தொடர்ந்து கருப்பு பணத்தை ஒழிக்கும் வண்ணம் தீவிர நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்த வருகிறது. கருப்பு பணத்தை பதுக்கியவர்கள் சிலர் தங்களிடம் உள்ள பணத்தை கடத்தி அண்டை மாநிலங்களில் கொண்டு சென்று மாற்றி வருவதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இந்த தகவலைத் தொடர்ந்து தமிழக - கேரளா எல்லையான நெல்லை மாவட்டம் புளியரையில் கடந்த சில தினங்களுக்கு முன் அதிரடி சோதனை நடைப்பெற்றது. இதில் கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு கொண்டுவரப்பட்ட 11 இலட்சம் ரூபாய் பிடிப்பட்டது. இதனைத் தொடர்ந்து புதன்கிழமை கேரள மாநிலம் கொல்லம் மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன் பிள்ளை தலைமையில் 6 பேர் கொண்ட குழுவினர் தமிழக எல்லை பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு செல்லும் பால் வண்டி, காய்கறி வாகனம், அரசு பேருந்துக்குள், கார் உள்ளிட்ட அனைத்து வாகனங்களையும் முழுமையாக சோதனை செய்த பின்னரே கேரள மாநிலத்திற்குள் அனுமதித்தனர்.
மேலும் கேரளாவை தமிழகத்துடன் இணைக்கும் 32 வழித்தடங்களில் உள்ள சோதனைச்சாவடிகளிலும் சாதாரண உடையில் போலீசார் கண்காணிப்புப் பணியை தீவிர படுத்தி உள்ளனர்.
-
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
39 வயதில் எழுதிய தேர்வு.. 60 வயதில் வந்த அரசு வேலை.. மஜித்தின் கதை சொல்லும் கசப்பான பாடம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications