ஜெயலலிதா கொடநாட்டில் ஓய்வு எடுக்கட்டும்...திரும்பி வர வேண்டாம்: குஷ்பு சுளீர்
சென்னை: ஜெயலலிதா அவர்களே நீங்கள் கொடநாட்டில் ஓய்வு எடுங்கள். திரும்பி வர வேண்டாம் என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளரும், நடிகையுமான குஷ்பு கூறியுள்ளார்.
சென்னை ராயபுரம் சட்டசபை தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மனோவை ஆதரித்து குஷ்பு நேற்று பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், கடந்த 5 வருடத்தில் ஜெயலலிதா மக்களை நேரடியாக சந்தித்தது கிடையாது. நல்லது, கெட்டது என எதற்கும் வந்தது கிடையாது. ஒரு ஹிட்லர் ஆட்சி நடந்துகொண்டிருக்கிறது.

சென்னையில் மழை வெள்ள பாதிப்பின்போது பார்வையிட வரவில்லை. அவருடைய தொகுதி ஆர்.கே.நகரில் கூட 10 நிமிஷம்தான் வந்தார். வேனில் இருந்து கூட இறங்கவில்லை. வேனில் இருந்தப்படியே வாக்காளப் பெருமக்களே என்று கூறினார். மக்களுடைய பிரச்சனை என்ன என்று கேட்கவில்லை. ஏனென்றால் சர்வாதிகார ஆட்சி. நான் செய்தது தான் சரி. மக்கள் என்னை ஓட்டு போட்டு ஜெயிக்க வைத்துவிட்டார்கள்.
நான் என்ன செய்தாலும் நீங்க தாங்கிதான் ஆகணும் என நினைக்கிறார்கள். அவங்க என்ன நினைக்கிறாங்க, சும்மாவா ஓட்டு போட்டீங்க, பணம் கொடுத்தோம், ஓட்டு போட்டீங்க, அப்ப நான் சொல்றத கேளுங்க என நினைக்கிறாங்க. மக்கள் என்ன அடிமைகளா. அவங்க கட்சியில எம்எல்ஏ, எம்பிக்கள் அடிமைகள் மாதிரி காலடில கிடக்கிறார்கள். ஓட்டு போட்ட மக்கள் அப்படி இருக்க வேண்டும் என்று அவங்க ஆசைப்படுறாங்களா. அதற்கு மக்கள் அனுமதிக்கலாமா.
வரும் சட்டசபை தேர்தலில் அவங்களுக்கு ஒரு பாடம் புகட்ட வேண்டும். போதும் உங்களோட அராஜகம். இனி இதை பொறுத்துக்கொள்ள மாட்டோம். மானம் மரியாதையோட வாழ ஆசைப்டுகிறோம். பணத்துக்காக நாங்கள் ஓட்டு போட மாட்டோம் என மக்கள் சொல்ல வேண்டும்.
2011 தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டோம் என்று ஜெயலலிதா சொல்கிறார். அப்படியென்றால் ஏன் உங்களுக்கு தோல்வி பயம் இருக்கிறது. இந்த முறை மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். பணத்துக்காக ஓட்டு போட மாட்டார்கள். ஜெயலலிதா அம்மையார் அவர்களே நீங்கள் கொடநாட்டில் ஓய்வு எடுங்கள். திரும்பி வர வேண்டாம். இவ்வாறு குஷ்பு தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications