கொடநாடு கொலை குற்றவாளி வட இந்தியாவில் பதுங்கல்.. விரைந்தது தனிப்படை

ஜெ. தங்கி ஓய்வெடுத்த கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலையின் முக்கிய குற்றவாளி வடஇந்திய மாநிலங்களில் பதுங்கியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதையடுத்து தனிப்படை விரைந்துள்ளது.

Subscribe to Oneindia Tamil

நீலகிரி: கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை கொள்ளையில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியைத் தேடி வடமாநிலங்களுக்குச் சென்றுள்ளது தனிப்படை .

கொடநாடு எஸ்டேட்டில் கடந்த மாதம் 23ம் தேதி காவலாளி ஓம்பகதூர் 11 பேர் கொண்ட கும்பலால் கொலை செய்யப்பட்டார். அதோடு எஸ்டேட்டில் கொள்ளையும் நடத்தியது அந்தக் கும்பல். மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய அந்த சம்பவத்தில் குற்றவாளிகளை போலீசார் விரைந்து செயல்பட்டு அடையாளம் கண்டனர்.

Kodanad murder suspect is hiding in north India: Police

போயஸ் கார் கார்டனில் டிரைவராக இருந்த சேலம் கனகராஜ் மற்றும் அவரின் நண்பர் சயான் உள்ளிட்ட கும்பல்தான் இந்த கொடூர குற்றத்தில் ஈடுபட்டனர் என்று கண்டுபிடித்த போலீஸ் அவர்களுக்கு வலை விரித்தது.

அடுத்து வந்த நாட்களில் சொல்லிவைத்து போல சேலம் கனகராஜ் ஆத்தூர் அருகே சாலை விபத்தில் இறந்தார். சயான் கேரளா மாநிலத்தில் சாலை விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். இது மேலும் கொடநாடு சம்பவத்தில் சந்தேகத்தை ஏற்படுத்தியது.

இந்த நிலையில்,கோவை அரசு மருத்துவமனையில் உள்ள சயானிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் கொடநாடு கொலை, கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியைத் தேடி வெளிமாநிலங்களுக்கு தனிப்படை போலீசார் விரைந்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+