கொளுத்தும் வெயிலில் மெரீனாவில் தொடரும் புரட்சி : பெண்கள் மயக்கம்- மருத்துவமனையில் அனுமதி
மெரீனா கடற்கரையில் கொளுத்தும் வெயிலில் 5வது நாளாக போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில் 20க்கும் மேற்பட்டவர்கள் மயக்கமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை: கொளுத்தும் வெயிலிலும், கொட்டும் பனியிலும் கடந்த 5 நாட்களுக்கும் மேலாக மெரீனா கடற்கரையில் லட்சக்கணக்கான மக்கள் ஜல்லிக்கட்டுக்காக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மெரீனா புரட்சி உலகத்தையே உலகத்தையே தமிழகத்தின் பக்கம் திரும்பி பார்க்க வைத்துள்ளது. இந்த போராட்டம் தொடர்ந்து 4 இரவுகளை கடந்து 5வது நாட்களாக வலுத்துவருகிறது. இங்கு மாணவர்கள் மட்டுமல்லாது சிறுவர்கள், தாய்மார்கள், பெண்கள் உள்ளிட்டோர் இங்கு தங்கி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இன்று வெயில் கொளுத்துவதால் ஏராளமானோர் குடை பிடித்துக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தற்போது 20 பேர் திடீரென மயக்கமடைந்ததாகவும், அவர்களை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மெரீனாவில் 5 நாட்களும் ஏராளமானோர் குவிந்து வருவதால் 3 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. 2 டாக்டர்கள் உள்ளனர். எனவே டாக்டர்கள் அதிகம் வேண்டும் என்றும் ஆம்புலன்ஸ்கள் அதிகம் வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.
இதனிடையே மெரீனா போராட்டத்திற்கு குழந்தைகளை அழைத்து வர வேண்டாமென இளைஞர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். மெரீனாவில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் குழந்தைகளை அழைத்து வர வேண்டாமென இளைஞர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சுகாதாரத்துறை அமைச்சர் இந்த போராட்டத்தை பார்க்க வேண்டும் என்றும், எங்களுக்கு தேவையான சுகாதார வசதிகள், மருத்துவ வசதிகளை செய்து தரவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
-
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications