சென்னையில் வாக்குவாதத்தின் போது மாணவர்களுக்கு அரிவாள் வெட்டு... 16 பேர் கைது
சென்னை: சென்னையில் கல்லூரி மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய 16 பேரை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை புரசைவாக்கம் பொன்னப்பன் தெருவை சேர்ந்த சிலர் நேற்று இரவு அப்பகுதியில் அமர்ந்து பேசிக் கொண்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த கார் ஒன்று அவர்கள் மீது மோதுவது போல் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் வெளியே பேசி கொண்டிருந்தவர்களுக்கும், காரில் இருந்தவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அப்போது, காரில் இருந்த நபர்கள், வெளியே இருந்த இளைஞர்களை இரும்பு பைப், அரிவாள், செங்கல், உருட்டு கட்டையால் பயங்கரமாக தாக்கியதாக தெரிகிறது. இதில் பலத்த காயமடைந்த முகமது ரியாஷ் (19), முகமது தாகா (22), முகமது இசாக் (21) ஆகியோர் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.காயமடைந்த 3 பேரும் தனியார் கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த வேப்பேரி போலீசார், காரில் இருந்த நபர்களை காவல்நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அவர்கள் அதே பகுதியை சேர்ந்த ஷாகுல் அமீது (36) மற்றும் அவரது நண்பர்கள் என்பது தெரியவந்தது.
இருதரப்பினருக்கும் இடையே முன்விரோதம் காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக சாகுல் அமீது மற்றும் அவரது கூட்டாளி உள்பட 16 பேர் கைது செய்த போலீஸார், அவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
சென்னை கிண்டி மேம்பாலத்தில் ஜொலித்த 1.5 கிலோ தங்கம்.. ஜிஎஸ்டி ஆபீசர் பின்னாடி போனால்? பெரிய ட்விஸ்ட் -
சென்னையில் தங்க ரதம்.. கண்டக்டர் இல்லாத பஸ்கள் அறிமுகம் செய்த அரசு.. எந்த ரூட்டில் இயக்கம்? -
கோல்டன் என்ட்ரி கொடுக்கும் 'தங்கப்' பேருந்து.. சென்னை சாலைகளில் இனி 'ராயல்' பயணம்.. சூப்பர் முடிவு! -
ஸ்ட்ரெச்சரில் படுத்தபடி சென்னையில் 10ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவன்.. சொல்ல சொல்ல ஆசிரியை எழுதிய விடை -
சிங்கப்பூரில் 4000 டாலர் சம்பளம்.. லேடீஸ் ஹாஸ்டல் ஐஸ்வர்யா மாஸ்டர் பிளானில் சிக்கிய பரிதாப பெண்கள் -
சென்னை விடுதிகளில் டீ, காபி கிடையாது.. PG-க்கள் அறிவிப்பு! பேச்சுலர்களுக்கு திண்டாட்டம்தான்! -
சென்னையின் காஸ்ட்லி ப்ரொஜெக்ட்.. அண்ணா சாலை மேம்பாலம்.. சைதாப்பேட்டை - சிஐடி நகர் பணிகள் ஓவர் -
பட்டா காத்திருந்தவர்களுக்கு ஜாக்பாட்.. 5952 மனுக்களில் குட் நியூஸ்.. கோவை, சென்னையில் 24 மணி அதிசயம் -
மின்சார வாரியம் சர்ப்ரைஸ்.. தமிழகத்தில் திடீர்னு ஏறிய கரண்ட் தேவை! உடனே வந்த மின்வாரிய ஹேப்பி நியூஸ் -
கூடுவாஞ்சேரியில் நள்ளிரவில் நடந்த தீவிபத்து! ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உடல் கருகி பலி! -
சென்னையில் புதிய அமெரிக்கத் துணைத் தூதராக மரியானா எல்.நெய்ஷுலர் பொறுப்பேற்பு -
"சாப்பாடு கிடையாது”.. சென்னையில் மக்களை அதிரவைத்த ஹோட்டல் அறிவிப்பு பலகை.. கேஸ் தட்டுப்பாட்டால் ஷாக்












Click it and Unblock the Notifications