வாகன காப்பகத்தில் அனாதையாக கிடந்த சிவ அங்கி... அதிர்ச்சியில் உறைந்த பயணிகள்
நாகர்கோவில்: நாகர்கோவில் வாகன காப்பகத்தில் அனாதையாக கிடந்த பையில் சிவ அங்கி இருந்ததைக் கண்ட அங்கிருந்த பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.
நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையத்தில் உள்ள வாகன காப்பகத்தில் ஒரு பை அனாதையாக கிடந்தது. நீண்ட நேரமாக பையை எடுக்க யாரும் வராததால் இரவு வாகன காப்பகத்தில் இருந்த ஊழியர்கள் பையை திறந்து சோதனை போட்டனர். அப்போது அதனுள் சிவனுக்கு அணிவிக்கும் அங்கி ஒன்று இருந்தது.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த வாகன காப்பாக ஊழியர்கள் இது தொடர்பாக வடசேரி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் அப்பையைக் கைப்பற்றி சோதனையிட்டனர்.
பை யாருடையது என்பது தெரியாததால், சுமார் நான்கரை கிலோ எடை கொண்ட அந்த பித்தளை சிவ அங்கியை நாகர்கோவில் சப் கலெக்டரிடம் ஓப்படைக்க முடிவு செய்தனர்.
அங்கி மிகவும் பளப்பளப்பு தன்மையுடன் இருந்தது. அதில் பூஜைகள் நடந்தற்கான அடையாளங்களும் இருந்தன. அங்கியை அருகில் இருந்த ஏதாவது ஒரு கோயிலில் இருந்து திருடிய மர்ம நபர்கள், போலீசுக்கு பயந்து வாகன காப்பகத்தில் விட்டுவிட்டு ஓடி இருக்க வேண்டும் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
பக்கத்தில் எந்த கோயிலிலாவது சிவ அங்கி காணாமல் போயுள்ளதா என்பது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவன் சொத்து...குலநாசம்....












Click it and Unblock the Notifications