பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு.. நாடு முழுவதும் லாரிகள் ஸ்டிரைக்.. சரக்குகள் தேக்கம்
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாடு முழுவதும் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் காலவரையற்ற ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளனர்.
Recommended Video

சென்னை: பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாடு முழுவதும் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் காலவரையற்ற ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளனர். இதனால் நாடு முழுவதும் சரக்குகள் தேக்கமடைந்துள்ளன.
அண்மை காலமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. இதனால் லாரி வாடகை தொழில் பாதிக்கப்பட்டுள்ளதாக உரிமையாளர்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தனர்.
டீசல் விலையை குறைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு அகில இந்திய லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை வைத்தனர். ஆனால் மத்திய அரசு இதனை காதில் போட்டுக்கொள்ளவில்லை. விலையும் குறைக்கப்படவில்லை.

இன்று முதல் ஸ்டிரைக்
இந்நிலையில், பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும், சுங்கச்சாவடியில் அதிக கட்டணம் வசூலிப்பதை கண்டித்தும் இன்று முதல் காலவரையற்ற ஸ்டிரைக் நடத்தப்போவதாக அகில இந்திய சரக்கு போக்குவரத்து வாகன உரிமையாளர்கள் சங்கத்தினர் அறிவித்தனர்.

த.நா லாரி உரிமையாளர்கள்
இதற்கு தமிழகம், கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநில லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் ஆதரவு தெரிவித்துள்ளனர். தமிழகத்தில், அகில இந்திய தரைவழி போக்குவரத்து வாகன உரிமையாளர்கள் சங்கம், தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் உள்ளிட்ட சங்கங்கள் இந்த ஸ்டிரைக்கில் பங்கேற்றுள்ளனர்.

பொதுமக்களின் தேவை
பொதுமக்களின் அன்றாட தேவையான காய்கறிகள், பழங்கள், அரிசி உள்ளிட்ட உணவு பொருட்கள் மற்றும் காஸ், பெட்ரோல் உள்ளிட்ட பொருட்கள் இந்த லாரிகள் மூலம் நகர்வு செய்யப்படுகின்றன.

சரக்குகள் தேக்கம்
நாடு முழுவதும் 75 லட்சம் சரக்கு போக்குவரத்து லாரிகள் உள்ளன.
இந்நிலையில் தமிழகத்தில் இன்று 13 லட்சம் லாரிகள் ஓடாது என அறிவிக்கப்பட்டுள்ளது. லாரிகள் வேலை நிறுத்தத்ததால் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் சரக்குகள் தேக்கமடைந்துள்ளன.
-
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்?












Click it and Unblock the Notifications