தேர்தல் பிரச்சாரம்: நடிகர், நடிகைகளுக்கு கிராக்கி

நாடாளுமன்ற தேர்தலின்போது தங்களது கட்சி சாதனையை ஒரு பக்கமும், தனது வாக்குறுதிகளை மறுபக்கமும், தங்களது கட்சியின் தேர்தல் அறிக்கையையும் என பல மாயா ஜாலங்களை பொது மக்கள் முன்பு காட்டினாலும், வேட்பாளர்கள் அதிகம் விரும்புவது நடிகர், நடிகைகளின் தேர்தல் பிரச்சாரமே.
தற்போது திரையுலகில் முன்னணியில் உள்ள நடிகர், நடிகைகள் தங்களுக்கு தேர்தல் பிரச்சாரம் செய்தால் தங்களுக்கு கிராமங்கள் மற்றும் நகரகங்களில் கும்பல் சேருவதுடன், தங்களுக்கு அது வாக்கு வங்கியாக மாறும் என நம்புகின்றனர்.
அதிமுகவில் நடிகர் சரத்குமார், நகைச்சுவை நடிகர் சிங்கமுத்து, செய்தி வாசிப்பாளர் பாத்திமா பாபு, அனிதா குப்புசாமி, நடிகை சி.ஆர். சரஸ்வதி, நடிகர் ராமராஜன் ஆகியோருக்கு மவுசு உள்ளதாக கூறப்படுகின்றது.
இதனால் இப்போதே அவர்களின் தொடர்பை வேட்பாளர்கள் உருவாக்கி வருகின்றனர். ஆனால் தலைமை யாரை தேர்தல் பிரச்சாரத்திற்கு அனுமதி அளிக்கின்றதோ அவர்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற நிலை உள்ளது.
அதே போல திமுகவில் நடிகை குஷ்பு, நகைச்சுவை நடிகர் குமரிமுத்து, நடிகர் சந்திரசேகர் என பெரிய பட்டாளமே உள்ளது. ஆனால் இன்னும் வேட்பாளர் நேர்காணலே முடியாமல் உள்ளதால் திமுகவினர் மவுனம் காத்து வருகின்றனர்.
ஆனால் ஒன்று மட்டும் உண்மை, தேர்தல் தேதி அறிவித்த சில நாட்களில் நமது ஊரில், நமது தெருவில் நடிகர், நடிகை பட்டாளங்கள் வாக்கு கேட்டு வருவது மட்டும் உறுதி.












Click it and Unblock the Notifications