தலைமை தகவல் ஆணையராக ராமானுஜத்தை நியமித்தது சட்ட அமைப்பை அவமதிக்கும் செயல்- ஸ்டாலின் கண்டனம்
சென்னை : மாநில தலைமை தகவல் ஆணையராக தமிழக அரசின் ஆலோசகராக செயலாற்றிய ராமானுஜத்தை நியமித்தது அரசியல் சட்ட அமைப்பை அவமதிக்கும் செயல் என தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவரது நியமனத்தில் வெளிப்படைத் தன்மை கடைபிடிக்கப்படவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
இது குறித்து மு.க.ஸ்டாலின் தனது முகநூலில் கூறியுள்ளதாவது...

பணி நீட்டிப்பு பெற்று மாநில காவல்துறை தலைவராக இருந்து பிறகு பணிஓய்வு பெற்றதும் தமிழக அரசின் ஆலோசகராக செயலாற்றிய திரு. ராமானுஜத்தை இப்போது மாநில தலைமை தகவல் ஆணையராக அ.தி.மு.க அரசு நியமித்திருக்கிறது.
இப்பதவிக்கு ஒருவரை பரிந்துரைக்க தகவல் உரிமை சட்டம்- 2005 ன்படி வரையறுக்கப்பட்டுள்ள தேர்வு நடைமுறைகள் முற்றிலும் மீறப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
தகவல் உரிமைச் சட்டத்தின்படி முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர், கேபினட் அமைச்சர் ஆகியோரைக் கொண்ட தேர்வு கமிட்டியின் ஒருமித்த பரிந்துரையின் பேரிலேயே மாநில தலைமை தகவல் ஆணையர் நியமிக்கப்பட வேண்டும்.
ஆனால் இந்த நடைமுறையை கடைபிடிக்கப்படாமல் தங்களுக்கு நெருக்கமான ஒருவரை இப்பதவியில் தன்னிச்சையாக அதிமுக அரசு நியமித்திருக்கிறது.
அரசியல் சட்ட பதவிகளுக்கு வெளிப்படைதன்மையற்ற வகையில் நியமனம் செய்யும் விதத்தில் இந்த நடவடிக்கை அமைவதோடு, மாநில தகவல் ஆணையம் போன்ற அரசியல் சட்ட அமைப்பை இந்த அரசு எப்படி அவமதிக்கிறது என்பதையும் எடுத்துக் காட்டுகிறது.
இவர் ஏற்கனவே உளவுத்துறையில் நீண்ட காலம் பணிபுரிந்து ரகசியம் காத்தவர். அப்படி ரகசியம் காத்தவர் இப்போது வெளிப்படையாக தகவல்களை தெரிவிக்க வேண்டிய தகவல் ஆணையத்தில் எப்படி மக்களுக்கு பயன்படும் வகையில் பணியாற்ற முடியும் என்ற கேள்வி எழுகிறது.
துடிப்பு மிக்க ஜனநாயகத்தில் ரகசியமும், வெளிப்படைத்தன்மையும் ஒன்றாக பயணிக்க முடியாது என்பது அனைவரும் அறிந்தது தான்.
தகவல் ஆணையம் மற்றும் அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையை பலவீனப்படுத்தும் வகையிலும், தகவல் பெற விரும்பும் மக்களை அவமதிக்கும் வகையிலும் நடைபெற்றுள்ள இந்த நியமனம் உண்மையிலேயே முறையற்ற நியமனம் என்பதால் வேதனையளிக்கிறது. இது தகவல் உரிமை சட்டத்திற்கு விடப்பட்ட சவாலாகவே நான் கருதுகிறேன்.
இவ்வாறு தனது முகநூலில் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications