மழைக்காக இடைத்தேர்தலை ஒத்திவைப்பதா?.. ஸ்டாலின் கண்டனம்!
தமிழகத்தில் இரண்டு தொகுதிகளின் இடைத்தேர்தல் தேதிகளை மழைக்காக அறிவிக்காமல் போன தேர்தல் ஆணையத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை: தமிழகத்தில் இரண்டு தொகுதிகளின் இடைத்தேர்தல் தேதிகளை மழைக்காக அறிவிக்காமல் போன தேர்தல் ஆணையத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகள் தற்போது காலியாக உள்ளது. அதிமுக எம்எல்ஏ டிகே போஸ் மறைவு காரணமாக திருப்பரங்குன்றம் தொகுதி காலியாக உள்ளது. திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி மறைவு காரணமாக திருவாரூர் தொகுதி காலியாக உள்ளது.

இந்த இரண்டு தொகுதிகளுக்கு விரைவில் தேர்தல் நடத்தப்பட வேண்டும். மாறாக இந்த இரண்டு தொகுதி இடைத்தேர்தல்கள் பின்பு அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டு இருக்கிறது. இதற்கு தேர்தல் ஆணையம், தமிழக அரசு மழையை காரணம் காட்டியதால் இப்போது தேர்தலை அறிவிக்கவில்லை என்றுள்ளது.
இந்த நிலையில் தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியாகாததற்கு திமுக தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. திமுகவில் தரப்பில் இதற்காகக் வழக்கு தொடுக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
இதுகுறித்து தற்போது திமுக தலைவர் ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார். அதில், தேர்தல் ஆணையம் தேர்தல் தேதியை அறிவித்திருக்க வேண்டும். தேர்தல் ஆணையம் உள்நோக்கத்துடன் செயல்படுகிறதா என்ற சந்தேகம் வருகிறது.
தலைமை தேர்தல் ஆணையம் இதில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைதேர்தலை தலைமை தேர்தல் ஆணையம் அறிவிக்க வேண்டும்.
மழையை காரணம் காட்டி தலைமைச் செயலாளர் கடிதம் எழுதுவதா?. டிசம்பரில் இவ்வளவு மழை பெய்ய போகிறது என்று ஆட்சியாளர்களுக்கு எப்படி தெரியும். தலைமைச் செயலாளர் எழுதிய கடிதத்தால் தேர்தலை ஒத்திவைப்பது நியாயமல்ல என்று ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications