கோமா நிலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் உள்ளது தமிழக அரசு... மு.க.ஸ்டாலின் விமர்சனம்
Subscribe to Oneindia Tamil
தருமபுரி : தமிழக அரசு கோமா நிலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் உள்ளதாக தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
அமைப்புசாராத் தொழிலாளர் நல வாரியங்கள் முடக்கத்தைக் கண்டித்து தர்மபுரியில் நேற்று நடைபெற்ற மாவட்ட மாநாட்டில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கலந்து பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது...

தமிழக முதல்வர் ஜெயலலிதா நாள் ஒன்றுக்கு ஒரு மணி நேரம் கூட செயல்படுவதில்லை.
முதல்வர் ஜெயலலிதா, தொழிற்சங்க நிர்வாகிகளை இழிவுபடுத்துவதுடன் அவர்களுக்கு எந்த நன்மைகளும் செய்யவில்லை. தமிழக சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் 200-க்கும் மேற்பட்ட அறிவிப்புகள் வெளியிடப்பட்டு அதனை செயல்படுத்தவில்லை.
அமைப்பு சாரா தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில் திமுக ஆட்சியில் ஆயிரத்து 116 கோடியே 51 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications