இரட்டை இலை விவகாரம்: ஹைகோர்ட்டில் மு.க.ஸ்டாலின் வழக்கு!

இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் சென்னை, உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை புதன்கிழமையன்று தாக்கல் செய்தார்.
அந்த மனுவில் கூறியுள்ளதாவது:
''சென்னையில் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட சிற்றுந்துகளில் இரட்டை இலை சின்னம் வரையப்பட்டுள்ளது.
இதை அகற்றக்கோரி ஏற்கனவே, நாங்கள் சட்டமன்றத்தில் குரல் கொடுத்தும் இதுவரை அதை அகற்ற நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, சிற்றுந்துகளில் உள்ள இரட்டை இலை சின்னத்தை அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்'' எனக் கூறியுள்ளார்.
மேலும், ''இதேபோல், தமிழக அரசு சார்பில் கொண்டு வரப்பட்ட அம்மா குடிநீர் திட்ட பாட்டிலிலும், இரட்டை இலை சின்னமும், ஜெயலலிதா படமும் வைக்கப்பட்டிருக்கிறது. அதேப்போன்று எம்.ஜி.ஆர். சமாதியிலும் இரட்டை இலை சின்னம் வைக்கப்பட்டிருக்கிறது. இவைகளை அகற்றவும் உத்தரவிட வேண்டும்'' என அவர் தனது மனுவில் கூறியுள்ளார்.
இவ்வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வர உள்ளது












Click it and Unblock the Notifications