மல்லையாவின் பீர் ஆலையை மூடுங்கள்...கேட் மீது ஏறி நின்று போராடிய பட்டதாரிப் பெண்!
திருவள்ளூர் : விஜய் மல்லையாவின் பீர் ஆலையை மூடக் கோரி திருவள்ளூர் அருகே அரண்வாயலில் பட்டதாரி பெண் தனியாக நின்று தொழிற்சாலை கேட்டில் ஏறி போராட்டத்தில் ஈடுபட முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மதுவிற்கு எதிராக எம்.பில் பட்டதாரியான நர்மதா தொடர்ந்து போராடி வருகிறார். சென்னை அண்ணா நகரில் வசித்து வரும் நர்மதா தமிழகம் முழுவதும் மதுக்கடைகளை மட்டுமின்றி மது ஆலைகளையும் மூட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
மதுப்பழக்கத்தால் ஏற்கனவே தனது தந்தையை இழந்து விட்ட நர்மதா, தற்போது தனது கணவரும் குடிப்பழக்கத்திற்கு ஆளாகி தனது வாழ்க்கையே சீரழிந்து விட்டதாக நர்மதா குற்றஞ்சாட்டியுள்ளார். மது பழக்கத்தால் பல பெண்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகியுள்ளதாகவும் நர்மதா குரல் எழுப்பினார்.

விஜய் மல்லையா பீர் பேக்டரி
இந்நிலையில் நர்மதா இன்று காலையில் திடீரென திருவள்ளூர் அருகே அரண்வாயலில் உள்ள விஜய் மல்லையாவின் பீர் ஆலையை மூடக் கோரி தனித்து போராட்டம் நடத்தினார். பீர் ஆலையின் கேட் மீது ஏறி நின்று நர்மதா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
|
தனியாக போராட்டம்
மதுவால் பல ஏழை குடும்பங்கள் மிகவும் கஷ்டத்தில் இருந்து வருவதாகவும், பல பெண்கள் தாலி இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் நர்மதா கூறியுள்ளார். முதலில் நான் தனியாக மட்டுமே இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளேன், இதனை பார்த்து பல ஆயிரம் பெண்கள் ஒன்றாக கூடி கூட்டு போராட்டமாக இது நிச்சயம் மாறும் என்றும் அவர் கூறியுள்ளார்.

நர்மதா கைது
போராட்டத்தில் ஈடுபட்ட நர்மதாவை பாதுகாவலர்கள் தடுத்தி நிறுத்தியும் கேட்காததால் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து போலீசார் கூறியும் கேட்காததால் திருவள்ளூர் மகளிர் போலீஸ் நர்மதாவை கைது செய்துள்ளனர்.

வீரியம் பெறும் போராட்டங்கள்
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பெண்கள், குழந்தைகள் டாஸ்மாக் கடைகளை சூறையாடி வருகின்றனர். இந்நிலையில் நர்மதா தனி ஆளாக நின்று போராட்டத்தில் ஈடுபட்டது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications