இன்னும் ஒரு அடி தான் மதுராந்தகம் ஏரி முழு கொள்ளளவை எட்ட... தயார் நிலையில் பொதுப்பணித்துறை!
காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் ஏரி முழு கொள்ளளவை எட்ட ஒரு அடி மட்டுமே உள்ளது.
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் ஏரி முழு கொள்ளளவை ட்ட ஒரு அடி மட்டுமே உள்ளது. இதனால் ஏரி நிரம்பினால் தண்ணீரைத் திறந்துவிட பொதுப்பணித்துறையினர் தயார்நிலையில் உள்ளனர்.
வடகிழக்குப் பருவமழை கடந்த ஒரு வாரமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில் வெளுத்து வாங்குகிறது. சென்னையில் தாழ்வான பகுதிகளில் தேங்கியிருந்த மழைநீர் கொஞ்சம் கொஞ்சமாக வடியத் தொடங்கியுள்ளன. எனினும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் அந்த மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான ஏரிகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

காஞ்சிபுரம் மாவட்டம் மணிமங்கலம் ஏரி முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதே போன்று மதுராந்தகம் ஏரியும் முழு கொள்ளவான 23.20அடியில் 22.5 அடியை எட்டியுள்ளது. இன்னும் ஏரி முழு கொள்ளளவை எட்ட ஒரு அடி மட்டுமே உள்ள நிலையில் உபரி நீரை வெளியேற்ற பொதுப்பணித்துறையினர் தயார் நிலையில் உள்ளனர்.
ஏரியின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டியவுடன் வெளியேற்றப்படும் உபரி நீரானது இந்த ஏரியின் கிளை கால்வாய் மற்றும் ஏரிகளுக்கு சென்று பயனளிக்கும் சென்று பொதுப்பணித்துறையினர் தெரிவிக்கின்றனர். எனவே மக்கள் அச்சப்படத் தேவையில்லை என்று மாவட்ட ஆட்சியர் முத்தையா கேட்டுக் கொண்டுள்ளார்.
இதே போன்று செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டமும் கட்டுப்பாட்டிற்குள்ளேயே இருப்பதாகவும், ஏரியின் நீர்மட்டம் 30 சதவீதத்தை மட்டுமே எட்டியுள்ளதால் மக்கள் வெள்ள அபாய என்ற வீணாண வதந்திகளை நம்ப வேண்டாம் என்று மாவட்ட ஆட்சியரும், தமிழக அரசும் கேட்டுக் கொண்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications