திருவள்ளூர் மாவட்ட கலெக்டருக்கு சம்பளம் கட்... ஹைகோர்ட் அதிரடி!
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியருக்கு சம்பளம் வழங்கக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Subscribe to Oneindia Tamil
திருவள்ளூர் : மாதவரம் வட்டாட்சியர் அலுவலகத்துக்கு வாடகை கொடுக்காததால் திருவள்ளூர் ஆட்சியருக்கு ஊதியம் வழங்க ஹைகோர்ட் தடை விதித்துள்ளது.
மாதவரத்தில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்திற்கு கடந்த ஆண்டு மே மாதம் முதல் வாடகை பாக்கி இருப்பதாக தெரிகிறது. மாதம் ரூ. 1.20 லட்சம் வாடகை தருவதாக கூறிய நிலையில் ஒப்பந்தம் புதுப்பிக்கப்படாததால் பாதிக்கப்பட்ட பரிதா சவுகத் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

தாலுகா அலுவலக கட்டிட உரிமையாளரான பரிதா சவுகத் என்ற மூதாட்டி தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி வட்டாட்சியர் அலுவலக மாத வாடகை ஒப்பந்தத்தை புதுப்பிக்கும் வரை வருவாய்த்துறை செயலர், திருவள்ளூர் ஆட்சியர், மாதவரம் தாசில்தார் ஆகியோருக்கு ஊதியம் வழங்கத் தடை விதித்தார்.












Click it and Unblock the Notifications