வழக்கறிஞர்கள் சட்ட திருத்தம் தற்காலிகமாக நிறுத்தி வைப்பு: தலைமை நீதிபதி கவுல்
சென்னை: வழக்கறிஞர்கள் தொடர்பான சட்ட திருத்தம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கவுல் அறிவித்துள்ளார்.
சென்னை உயர்நீதிமன்றம் வழக்கறிஞர் சட்டம் 1961 பிரிவு34(1)ல் பல்வேறு திருத்தங்களை கடந்த மே மாதம் அறிவித்தது. இதன்படி தவறு செய்யும் வழக்கறிஞர்களை மாவட்ட/உயர்நீதிமன்ற நீதிபதிகளே தண்டிக்கலாம். வழக்கறிஞர் தொழில் செய்ய தற்காலிகமாகவோ, நிரந்தரமாகவோ தடை செய்யலாம் என்பது உள்ளிட்ட அம்சங்கள் அதில் இடம்பெற்றிருந்தன.
இதற்கு வழக்கறிஞர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இச்சட்டத்தை திரும்பப் பெறக் கோரி பல்வேறு கட்ட போராட்டங்களையும் வழக்கறிஞர்கள் நடத்தினர்.

முற்றுகைப் போராட்டம்
இதன் உச்சகட்டமாக வழக்கறிஞர்கள் கூட்டு நடவடிக்கைக் குழு சார்பில் உயர் நீதிமன்ற முற்றுகைப் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதே நேரத்தில் இந்திய பார் கவுன்சில் தலைவர் மன்னன் குமார் மிஸ்ரா, 126 தமிழக வழக்கறிஞர்களை சஸ்பென்ட் செய்து உத்தரவு பிறப்பித்ததால் வழக்கறிஞர்களின் போராட்டம் சூடு பிடித்தது.

இரவில் விடுதலை
சென்னை உயர்நீதிமன்றத்தை நேற்று காலை முதல் இரவு வரை பல்வேறு சங்கங்களைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் முற்றுகையிட்டனர். இதில் கலந்து கொண்ட பெண் வழக்கறிஞர்கள் 15 பேர் உட்பட 596 பேர் கைதாகி விடுதலை செய்யப்பட்டனர்.

விதி குழுவிடம்தான் முறையிடனும்...
பொதுச்சொத்துக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் 5 வழக்கறிஞர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். இதனிடையே சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், புதிய சட்டத்திருத்த விதிக்கு எதிராக தொடர்ந்து வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதை ஏற்க முடியாது. இந்த பிரச்சனை குறித்து வழக்கறிஞர்கள் விதி குழுவிடம் முறையிடாமல் போராட்டம் நடத்துவதை ஏற்க முடியாது. சரியான நபர்களின் வழிகாட்டுதல்கள் இல்லாததால் வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் எனக் கூறி இருந்தார்.

சட்ட திருத்தம் நிறுத்தம்
இந்நிலையில் வழக்கறிஞர்களின் போராட்டம் எதிரொலியாக சர்ச்சைக்குரிய வழக்கறிஞர்கள் தொடர்பான சட்ட திருத்தம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும் என தலைமை நீதிபதி கவுல் இன்று அறிவித்தார். வழக்கறிஞர்களின் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில் இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications