வேலைக்கார பெண்ணை அடித்து உதைத்த நீதிபதி மனைவி: தூத்துக்குடியில் பரபரப்பு
தூத்துக்குடி: நீதிபதியின் மனைவி தாக்கியதாக கூறி, நீதிபதியின் வீட்டில் வேலை பார்க்கும் பெண் ஊழியர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் தூத்துக்குடியில் நடந்துள்ளது.
தூத்துக்குடி 2வது கேட் அருகே உள்ள ராஜமணி தெருவைச் சேர்ந்தவர் சாஹீருசைன். இவரது மனைவி பீமாஜான் (40). நீதிமன்ற கடைநிலை ஊழியர். இவரை நீதிபதி ஒருவரின் மனைவி தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தாக்குதலுக்கு உள்ளான பீமாஜான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவர் போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில், "நான் வேலை பார்க்கும் நீதிபதி வீட்டிற்கு, சார்பு நீதிபதி நாகராஜனோட மனைவி, மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி ராஜலிங்கத்தோட மனைவி, கூடுதல் மாவட்ட உரிமையில் நீதிமன்ற நீதிபதி சரவணபவனோட மனைவி ஆகிய மூன்று பேரும் வந்திருந்தார்கள்.
அவர்கள் இருந்த அறை கதவை திறக்கும்போதெல்லாம் சத்தம் அதிகமாக வந்தது. எனவே கதவுக்கு சரியாக எண்ணை போட்டு பராமரிக்கவில்லை என்று என்னிடம் கடிந்து கொண்டனர். நான் பதில் பேசாமல் வெளியே போனேன். திமிரு காரணமாக ஒன்றும் பேசாமல் போவதாக அந்த பெண்கள் என்னை பற்றி பேசினர்.
நான் கோர்ட்டுக்கு சென்று கிளர்க்கிடம் நடந்த விவரங்களை தெரிவித்தேன். அவரும், நீதிபதி வரட்டும், வந்தபிறகு அவங்ககிட்ட சொல்லிக்குவோம் இப்போ பயப்படாம வீட்டுக்கு போ என்று என்னை அனுப்பி வைத்தார்.
நான் வீட்டுக்கு போனதும், இவ்வளவு நேரம் பதில் பேசாமல் எங்கே சென்றாய் என்று கூறியதுடன், கெட்ட வார்த்தையிலும் திட்டினர். ஏ.டி. நீதிபதியோட மனைவி ரோஹினி, என்னை திடீரென்று அடித்துவிட்டார். மற்றவர்களும் என்னை திட்டினாங்க. அவங்ககிட்டர்ந்து தப்பித்து வந்து இந்த மருத்துவமனையில சேர்ந்திருக்கேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தென்பாகம் போலீஸார் வழக்கு பதிவு செய்வது குறித்து ஆலோசனை செய்து வருகிறார்கள்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications