வேலூர் அருகே 3 கார்கள் மோதி கோர விபத்து... 7 பேர் மரணம் - வீடியோ
வேலூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து மூன்று கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதிய விபத்தில் 7 பேர் உயிரிழ்ந்தனர்.
வேலூர்: பெங்களூரு சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து மூன்று கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதி ஏற்பட்ட விபத்தில் 7 பேர் சம்பவ இடத்திலேயே இறந்த சம்பவம் அதிர்ச்சியை எற்படுத்தியுள்ளது.
Recommended Video

வேலூர் அருகே ரத்தினகிரி என்ற இடத்தில், பெங்களூரு சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்னையிலிருந்து பெங்களூரு நோக்கி கார் ஒன்று சென்றுகொண்டிருந்தது. அப்போது குறுக்கே இருசக்கர வாகனம் வந்ததால், அதன் மேல் மோதக் கூடாது என்பதால் காரை ஓட்டுநர் பிரேக் போட்டு மெதுவாக நிறுத்தியுள்ளார்.

அப்போது பின்னாடி வந்த இரண்டு கார்கள் நின்றுகொண்டிருந்த கார் மீது ஒன்றுக்குப் பின் ஒன்றாக மோதியது. மூன்று காரிலும் பயணம் செய்தவர்களில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர்.
மேலும், 5 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதனையடுத்து, விபத்து நடந்த இடத்தை வேலூர் எஸ்.பி.பகலவன் மற்றும் எம்.எல்.ஏ காந்தி ஆகியோர் நேரில் வந்து பார்வையிட்டனர்.












Click it and Unblock the Notifications