குமரி மாவட்ட இயற்கை வளங்களை அழிக்கும் குவாரிகள்.. நடவடிக்கை எடுக்க மனோ தங்கராஜ் எம்எல்ஏ கோரிக்கை!
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்ட இயற்கை வளங்களை அத்துமீறி அழிக்கும் குவாரிகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனோ தங்கராஜ் எம்.எல்.ஏ. (பத்மநாபபுரம் தொகுதி-திமுக) வற்புறுத்தியுள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

கன்னியாகுமரி மாவட்டத்தில் சுமார் 47 குவாரிகள் அரசால் அனுமதிக்கப்பட்டுள்ளது. இவற்றில் பெரும்பாலான குவாரிகள் கனிம வளங்களை உடைத்தெடுத்து கேரளாவிற்கு கடத்துவதை தொழிலாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.
அனுமதிக்கப்பட்ட அளவை விட பன்மடங்கு அதிகமாகக் கனிம வளங்கள் உடைத்தெடுக்கப்பட்டு சூறையாடப்பட்டு வருகிறது. குமரி மாவட்டத்தின் ஊரகச் சாலைகள் 10 முதல் 15 டன் வரையிலான எடையுடைய பாரங்களை கொண்டு செல்லும் விதத்திலேயே அமைக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. ஆனால் ஒரு சில குவாரி உரிமையாளர்கள் 40 டன் வரையிலான எடையையுடய கற்கள் மற்றும் ஜல்லிகளை ஏற்றிச் செல்வதால் இந்தச் சாலைகள் முற்றிலுமாகப் பழுதடைந்து வருகிறது.
இப்படி பழுதடைந்த குண்டும், குழியுமான சாலைகளில் மீண்டும் மீண்டும் அதிகனரக வாகனங்கள் இயக்கப்படுவதால், பயணிகளும் பொது மக்களும் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். உள்ளாட்சி அமைப்புகளில் நிதி இல்லாத சூழ்நிலையில் இவ்வாறு பழுதடைந்த சாலைகளைச் சரி செய்ய முடியாமல் உள்ளாட்சி நிர்வாகங்கள் திணறி வருகின்றன.
குவாரி நிர்வாகங்களின் அத்துமீறலுக்கு உதாரணமாக: கடந்த ஜூலை மாதத்தில் 11736 யூனிட் கருங்கற்கள் மற்றும் ஜல்லி, 7000 யூனிட் மண் மட்டுமே வெட்டியெடுக்க கனிம வளத்துறையால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அனுமதித்த அளவைவிட பன்மடங்கு அதிகமாகக் கனிம வளங்கள் வெட்டி எடுக்கப்பட்டுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக குவாரி நிறுவனங்கள் முறைகேடாக, ஒரே அனுமதிச்சீட்டை பலமுறை பயன்படுத்துவதாகவும் பொதுமக்கள் பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இந்நிலை தொடருமாயின் குமரி மாவட்டத்தின் தற்போதய சூழலை விட மிகப்பெரும் அழிவை சந்திக்க நேரிடும் என்பது பலதரப்பட்ட சமூக ஆர்வலர்கள் மற்றும் பொது மக்களின் கருத்தாகும். இது மட்டுமல்லாமல் வாகனங்களில் ஏற்றிச் செல்லப்படும் ஜல்லி, மண் மற்றும் கற்கள் போன்றவை பாதுகாப்பற்ற முறையிலேயே கொண்டு செல்லப்பட்டு வருகிறது.
அதாவது, இவற்றை முறையாகவும் பாதுகாப்பாகவும் மாசுபடுத்தாத வகையில் பொது மக்களுக்கு இடையூறின்றி கொண்டு செல்லப்படுவதில்லை. இதன் விளைவாக காற்றில் பறந்து வரும் மண் துகள்கள் பாதசாரிகள், பயணிகள், வாகன ஓட்டிகள், சாலையோர வீடுகள், வணிக நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்களுக்கு பெரும் மாசுபாட்டை உருவாக்குவதோடு பொது மக்களுக்கு பல்வேறு வகையிலான நோய்கள் ஏற்படவும் காரணமாக உள்ளது.
எனவே இது போன்ற குற்றச்சாட்டுகளை மாவட்ட நிர்வாகம் உடனடியாக ஆய்வு செய்து தவறுகளைக் கண்டறிந்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
-
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
சிவக்குமார் விஜய்யை பாராட்டி பேச பேச சத்யராஜ் கொடுத்த ரியாக்ஷன் பாருங்க.. அமைதியாக கவனிக்கும் திமுக -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா?












Click it and Unblock the Notifications