எனக்காக பிறந்தாலே எனதழகி.. ஐ லவ் யூ மாமா.. உருகி உருகி காதலித்த நிலானி-காந்தி.. மிரள வைக்கும் வீடியோ
உதவி இயக்குநர் காந்தி லலித்குமாரும் சீரியல் நடிகை நிலானியும் உருகி உருகி காதலித்த வீடியோக்கள் வரிசையாக வெளியாகி வருகின்றன.
Recommended Video
சென்னை: உதவி இயக்குநர் காந்தி லலித்குமாரும் சீரியல் நடிகை நிலானியும் உருகி உருகி காதலித்த வீடியோக்கள் வரிசையாக வெளியாகி வருகின்றன.
சின்னத்திரை நடிகையான நிலானி, பல்வேறு தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார். இவர், தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து, காவலர் சீருடையில் போலீசாரை விமர்சித்து வீடியோ வெளியிட்டார்.
அவரது கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தவே நிலானி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் ஜாமினில் வெளிவந்துள்ளார் காந்தி லலித்குமார்.
திருமணத்திற்கு வற்புறுத்தல்
அவர் காந்தி லலித்குமார் என்ற இளைஞருடன் கடந்த 3 ஆண்டுகளாக பழகி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு லலித்குமார் நடிகை நிலானியை வற்புறுத்தியதாக மயிலாப்பூர் காவல் நிலையத்தில் நடிகை நிலானி புகார் அளித்தார்.
காதலன் தற்கொலை
இதையடுத்து மனமுடைந்த காந்தி லலித்குமார் நேற்று தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை உயிரிழந்தார்.
கட்டிப்பிடிக்கும் போட்டோ
இந்நிலையில் காந்தி லலித்குமார் - நிலானி ஆகியோர் சேர்ந்திருக்கும் அந்தரங்க போட்டோக்கள் வெளியாகியுள்ளன. படுக்கையறை போட்டோக்களும் ஒட்டி உரசியபடி கட்டிப்பிடித்து நிற்கும் போட்டோக்களும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மெட்டி போடும் வீடியோ
மேலும் செப்டம்பர் 4 ஆம் தேதி மெட்டிபோட்டு நிலானியை காந்தி லலித்குமார் திருமணம் செய்து கொண்டதாக இருவரும் சேர்ந்து தெரிவிக்கும் வீடியோவும் மெட்டி போட்டுவிடும் வீடியோவும் வெளியாகி உள்ளது.
லலித்குமாருடன் உல்லாசம்
காந்தி லலித்குமாருடன் உல்லாசமாக இருக்கும் போது காந்தியின் கால்மேல் தனது காலை வைத்து நிலானி மெட்டியை காட்டும் போட்டோவும் உள்ளது. மேலும் இருவரும் மாறி மாறி முத்தம் கொடுத்து ஐ லவ் யூ சொல்லிக்கொள்ளும் வீடியோவும் உள்ளது.
கன்னத்தில் முத்தத்தின் ஈரம்..
அதுமட்டுமின்றி எனக்காக பிறந்தாலே எனதழகி.. கன்னத்தில் முத்தத்தின் ஈரம் அது காயவில்லையே.. போன்ற பாடல்களின் பின்னணியில் தங்களின் போட்டோக்களை வைத்து தயார் செய்யப்பட்ட வீடியோவும் நிலானியின் பேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் நிலானி ஐ லவ் யூ மாமா என்று கூறியுள்ளார்.
உருகி உருகி காதலித்து
அந்த போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை பார்க்கும் போது இருவரும் உருகி உருகி காதலித்தது தெள்ளத் தெளிவாகிறது. ஆனால் திடீரென நிலானி திருமணத்திற்கு மறுத்ததும் லலித் குமார் மீது புகார் அளித்ததும் ஏன் என்பது விசாரணைக்கு பின்னரே தெரியவரும்.