500ரூபாய், 1000 ரூபாய் நோட்டுக்களாக குவியும் மொய் .. கவலையில் "கல்யாணங்கள்"!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கள்ளப்பணம், கருப்பு பணத்தை ஒழிக்க 500, 1,000 ரூபாய் நோட்டு செல்லாது என நவம்பர் 8ம் தேதி பிரதமர் நரேந்திரமோடி அதிரடியாக அறிவித்தார். இந்த அறிவிப்பு பலருக்கு அதிர்ச்சியை அளித்தாலும் பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

செய்தி பரவியதும் டீ கடைகள், மளிகை கடைகள், டிபார்ட்மென்டல் ஸ்டோர் ஆகியவற்றில் புகுந்து பொருட்களை வாங்கினர். இதனால், நூறு ரூபாய் நோட்டுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. ஹோட்டல்களில் சாப்பிட்டு விட்டு பணம் கொடுக்க முடியாமல் பலரும் தவித்தனர்.

Marriage halls are flooded with Rs 500 and 1000 notes

திருமண மண்டபங்களில் குவிந்திருந்தவர்களுக்கு மோடியின் அறிவிப்பு அதிர்ச்சியாகவே இருந்தது. கையில் இருப்பது 500 ரூபாய் நோட்டுக்கள்தான் என்பதால் அவற்றை மாற்றுவது எப்படி? மொய் எழுதினால் ஏற்றுக்கொள்வார்களா? என்ற தயக்கமே ஏற்பட்டது. பணமாக கையில் கொடுக்க கொண்டு வந்தவர்கள் கவரில் போட்டு 500, 1000 ரூபாய்களாக கொடுத்துச் சென்றனர்.

மொய் பணம் வாங்குபவர்களிடமும் பணம் மாற்றுவதற்கு ஒரு கூட்டம் முண்டியடித்தது. ரூ.1,00, ரூ.200 மொய் எழுதுபவர்கள் சிலர், தங்கள் நண்பர்களோடு சேர்ந்து ஒரே கவரில் பெயர்களை எழுதி மொய் கவர் கொடுத்தனர்.

இன்று காலையில் திருமணம் முடிந்த உடன் மொய் எழுதியவர்கள் பைகளில் 500, 1000 ரூபாய் நோட்டுக்களாகவே இருந்தது. சிலர் மட்டுமே 100 ரூபாய் நோட்டுக்களை கொடுத்தனர். வைத்திருந்தவர்களுக்கு கூடுதல் வருமானம் என்றாலும், அந்த பணம் கையில் கிடைத்தும் அனுபவிக்க முடியாத நிலையே ஏற்பட்டுள்ளது. மொய் பணத்தை வைத்து மண்டப வாடகை, கேடரிங், அலங்காரம் செய்தவர்கள், ஆகியோர்களுக்கு பணமாக கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மண்டப வாடகை போன்றவற்றை செக் அல்லது டெபிட் கார்டுகள் மூலம் செலுத்த யோசனை செய்து வருவதாக திருமணம் நடத்துபவர்கள் தெரிவித்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+