எஸ்.சி., எஸ்.டி சட்ட திருத்தம்.. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தர்ணா.. திருமுருகன் காந்தி கைது
Subscribe to Oneindia Tamil
சென்னை: எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை சட்ட விவகாரம் தொடர்பாக சென்னை சென்டிரல் ரயில் நிலையத்திலும், கோவை ரயில் நிலையத்திலும், தமிழ் அமைப்புகள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை சட்டத்தில் உச்சநீதிமன்றம் மாற்றம் செய்தததால் சட்டத்தின் வலு குறைந்துவிட்டதாக கண்டனம் தெரிவித்து, மே 17 இயக்கம் மற்றும், எஸ்.டி.பி.ஐ உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இன்று போராட்டம் நடைபெற்றது.

ரயிலை மறிக்க போலீசார் அனுமதி வழங்காவிட்டாலும், ரயில் இன்ஜினை மறித்து போராட்டம் நடத்தினர். இதையடுத்து மே 17 இயக்க தலைவர் திருமுருகன் காந்தி உள்ளிட்ட 100 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதேபோல கோவை ரயில் நிலையத்தில் நடந்த மறியல் போராட்டத்தில் பங்கேற்ற சுமார் 100 பேரும் கைது செய்யப்பட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications